Announcement

Collapse
No announcement yet.

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’

    வேண்டாம் இந்தச் சூதாட்டம்’
    என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்
    செய்யவில்லை?கிருஷ்ணன்
    பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
    முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
    தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
    உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென
    நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம்
    கேட்டதில்லை. துவாபரயுகத்தில்,
    தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,
    உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த
    அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்,
    நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால்,
    நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
    ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும்
    ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
    எனது அவதாரப் பணியை முடிக்க
    நினைக்கிறேன்" என்றார்.
    தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
    சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக்
    கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,
    செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,
    புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான
    காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள
    விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன
    வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ
    நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற
    பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப்
    புரியாத விஷயங்கள் பல உண்டு.
    அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய
    ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?"
    என்றார் உத்தவர்.
    உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில்
    எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ
    பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்
    ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
    நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
    நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’
    என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,
    முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
    இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
    அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போக
    ட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்
    அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
    வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
    அதையும் நீ செய்யவில்லை. தருமன்
    செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;
    தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
    தண்டனையாக,
    அதோடு அவனை விட்டிருக்கலாம்.]
    தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
    சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.
    அதையும் நீ செய்யவில்லை.
    'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
    வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
    திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான்
    துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
    சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்
    தருமனுக்குச் சாதகமாக
    விழும்படி செய்திருக்கலாம். அதையும்
    செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்
    துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்
    நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்
    தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’
    என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
    ஒருவன், குலமகள் சிகையைப்
    பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர்
    முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த
    பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
    எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
    ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த
    நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ
    செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்
    கேட்டார் உத்தவர்.
    இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
    மகாபாரதம் படித்துவிட்டு நாம்
    அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.

    contd..2
Working...
X