Announcement

Collapse
No announcement yet.

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’--3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’--3

    நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்
    கேட்டிருக்கிறார் உத்தவர்.
    பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்
    உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம
    நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்
    தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்
    தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும்
    புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
    தொடர்ந்தான்.
    "துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.
    ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,
    ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான்
    வைக்கிறேன். என் மாமா சகுனி,
    பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான்
    துரியோதனன். அது விவேகம்.தருமனும்
    அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,
    'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
    சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
    பகடைக்காயை உருட்டுவான்'
    என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
    நானும் சூதாடியிருந்தால், யார்
    ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
    எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
    காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,
    அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்
    போட முடியாதா? போகட்டும். தருமன்
    என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
    மறந்துவிட்டான்

    என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால்,
    அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
    தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால்
    சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த
    விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்
    தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்
    சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
    வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.
    என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு,
    அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்
    அங்கு வரக் கூடாதென
    என்னிடமே வேண்டிக்கொண்டான
    ்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக்
    கூப்பிட
    மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்
    காத்துக்கொண்டு நின்றேன்
    .பீமனையும்,
    அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்
    வைத்து இழந்தபோது, அவர்களும்
    துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள்
    கதியை எண்ணி நொந்து கொண்டும்
    இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட
    மறந்துவிட்டார்களே!
    அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
    சென்று, திரௌபதியின் சிகையைப்
    பிடித்தபோது, அவளாவது என்னைக்
    கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
    தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,
    வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
    என்னைக் கூப்பிடவில்லை!
    அழைத்ததும்
    சென்றேன். அவள் மானத்தைக் காக்க
    வழி செய்தேன்.

    contd..4



  • #2
    Re: வேண்டாம் இந்தச் சூதாட்டம்’--3

    Good Sir,
    Please continue.Short and interesting, your posts.
    Makes us think that we should always think of Lord Krishna.HE is just waiting for a chance to help us.
    Thanks again,
    Varadarajan

    Comment

    Working...
    X