Announcement

Collapse
No announcement yet.

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’

    இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன
    தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
    "அருமையான விளக்கம் கண்ணா!
    அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.
    உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
    என்றார் உத்தவர்.
    "கேள்" என்றான் கண்ணன்.
    "அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ
    வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட,
    ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ
    வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.
    "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம
    வினைப்படி அமைகிறது. நான்
    அதை நடத்துவதும் இல்லை; அதில்
    குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்
    'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில்
    நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
    அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
    "நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
    அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள்
    செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
    கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
    தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்
    குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
    கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"
    என்றார் உத்தவர்.
    "உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்
    உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.
    நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள்
    உணரும் போது, உங்களால்
    தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்
    செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்
    போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
    செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
    பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
    நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
    தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்
    நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
    நான் சாட்சி பூதமாக எப்போதும்,
    எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்
    உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்
    அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
    உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்
    ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!
    எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்,
    பிரார்த்தனை செய்வதும்,
    அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்
    உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்
    அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
    சாட்சி பூதமாக அருகில்
    நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
    அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
    முடியும்? இந்த தத்துவத்தைதான்
    பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
    அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
    அர்ஜுனனுக்காகத் தேரைச்
    செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன்
    இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
    போராடவில்லை

    The end: Source: Face book
    உலக பிராமணர்கள்


Working...
X