Announcement

Collapse
No announcement yet.

திருவித்யயணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவித்யயணம்

    திருவித்யயணம் என்றால் என்ன. பிராமணர்களில் சிலர் அவர்கள் அகங்களில் நடக்கும் சிராத்தங்களை கூட 'நாளை அடியேன் தகப்பனார் திருவித்யயனம் ' என்று சொல்கிறார்களே. கோவில்களிலும் இந்த வார்த்தை உபயோகத்தில் உள்ளது. அப்படி என்றால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் அல்லது விபரம் என்ன?

    ( வாக்கியத்தில் தவறு இருந்தால் திருத்தவும் க்ஷமிக்கவும் கோருகிறேன்

  • #2
    Re: திருவித்யயணம்

    ஶ்ரீ:
    திருவத்யயனம் - திரு + அத்யயனம்
    அத்யயனம் என்றால் கற்றல், வாசித்தல், பாராயணம் செய்தல் என்ற பொருள்கள் உண்டு.
    ச்ராத்தத்தின் முதல் அங்கம் வேத, திவ்யப்ரபந்த பாராயணம் செய்தல் ஆகும்.
    அதன் பிறகு, சாற்றுமுறை, ஔபாஸனம், ச்ராத்தம் என்பவை தொடரும்.
    ச்ராத்தத்தன்று அத்யயனம் ஆகிய பாராயணம் செய்வதால், தென்கலையார் ச்ராத்தம் என்பதை திருவத்யயனம் என்றே வழங்கிவரலாயினர்.

    கொசுறு:
    ஒரு ஆசிரியருக்கு புஷ்பம் என்று சொல்ல வராது அதனால் பூ என்பார், புய்பம் என்பார்.

    ஒருநாள் கல்வி ஆய்வாளர் பள்ளிக்கு விஜயம் செய்தபோது, அந்த வகுப்பு மாணவன் ஒருவனை பார்த்து,
    பூவைக் காண்பித்து இது என்ன என வினவினார்.
    பையன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல 'புய்ப்பம்' என்றான்.
    ஆய்வாளர் அவனைத் திருத்தி 'புஷ்பம்' என்று சொல்லிக்கொடுத்தார்,
    உடனே மாணவன் இல்லை ஐயா, எங்கள் ஆசிரியர் 'புய்பம்' என்றுதான் சொல்லித் தந்தார் என்றான்.
    உடனே ஆசிரியர் சாமர்த்தியமாக "கண்ணா புய்ப்பம் என்றும் சொல்லலாம், ஐயா சொன்னமாதிரியும் சொல்லலாம்" என்றாராம்.

    இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
    ச்ராத்தம் என்று சொல்ல பலருக்குச் சரியாக வராது. ஸ்ரார்த்தம் என்பர், சிராத்தம் என்பர் இப்படியெல்லாம் சொல்வதைவிட
    திரு என்கிற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளமையால் அதைத் தமிழ் என்று கருதி அவர்கள் 'திருவத்யானம்' என அழைக்கிறார்கள்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: திருவித்யயணம்

      ஸ்வாமின்,தாங்கள் பகிர்ந்தது அவ்வளவும் மிக்க சரியே. மெத்த படித்தவர்கள் கூட ஸ்ராத்தம் என்பதை சிரார்த்தம் என்றே சொல்கிறார்கள் எழுதுகிறார்கள் .இம்மாதிரியான பிராமணர்களை எப்படி திருத்துவது ? சரி. வடகலையார் ச்ராத்தத்தை ஏதோ ஓரிருவர் தவிர மற்றவர்கள் திரு வித்யயணம் என்று சொல்வது கிடையாது.என்பதும் அந்த வார்த்தையை அடியேன் உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் நினைக்கிறேன் .நன்றி.

      Comment

      Working...
      X