Announcement

Collapse
No announcement yet.

இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள் .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள் .

    *அறிய வேண்டிய விஷயங்கள் ஆயிரம்***
    *கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.
    *தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு.
    *தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்.
    *தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
    *ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி
    முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
    கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.

    *சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
    அவர்களுக்கு உதவ வேண்டும்.

    *அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்
    *பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு
    இவைகள் எதிரில் குறுக்கிட்டால் , வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

    *குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது.
    *ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.
    *துணியில்லாமல் குளிக்கக்கூடாது.
    *சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
    *கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.

    *மழை பெய்யும் போது ஓடக்கூடாது
    *தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.
    *நெருப்பை வாயால் ஊதக்கூடாது
    *மலஜலம் கழிக்கும் போது ,
    இரவில் தெற்கு முகமாகவும் ,
    மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும்.

    *கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது.
    *பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,
    தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ ,
    புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

    *குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் ,
    திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் ,
    மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.

    *சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.
    *சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.
    *பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது.
    *கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும்.

    *திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்.
    *கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.
    *இருட்டில் சாப்பிடக்கூடாது.
    *சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
    சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .

    *சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது
    வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் ,
    நரம்பில் புததிக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும்.

    *சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ ,
    வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது.

    *வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும்.
    *மனைவி கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர ,கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது.
    *குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது
    வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

    *ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது.

    தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்.இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது.
    *இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது.
    *வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
    *தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.
    *வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது.
    *மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
    உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

    *பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.
    *ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
    *வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது
    *நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.
    *ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது.
    *சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது.

    contd..2
Working...
X