Announcement

Collapse
No announcement yet.

தெரிந்ததும் தெரியாததும்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரிந்ததும் தெரியாததும்.

    கரஹரப்ரியா, ஸ்ரீரஞ்சனி, ஆபோகி ஆகிய மூன்று ராகங்களும் ஒரே பரம்பரையில் உள்ளவை. கரஹரப்ரியா ஒரு சம்பூர்ண மேளகர்த்தா ராகம். அதன் மேளம் 22. அதிலிருந்து பஞ்சமத்தை அகற்றினால் ( வர்ஜ்யம் ). அதுவே ஸ்ரீரஞ்சனி. பஞ்சமமும் நிஷாதமும் ( நி) இல்லாமல் பாடினால் கிடைப்பது ஆபோகி. இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதது இதுதான். வீணைக்கென்றே பிறப்பெடுத்த எஸ்.பாலசந்தர், இந்த மூன்று ராகங்களையும் சற்றும் சுவை குன்றாமல் உரிய சிரமத்துடன் ஆல் இந்தியா ரேடியோ கச்சேரி ஒன்றில் அடுத்தடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார்.
    -- எஸ்.சிவகுமார். இசை நாட்டியம் நாடகம்.
    -- ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X