Announcement

Collapse
No announcement yet.

தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

    கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது
    *குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி
    முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
    கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.

    *சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
    அவர்களுக்கு உதவ வேண்டும்.

    *அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்
    *குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன(உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.
    *துணியில்லாமல் குளிக்கக்கூடாது.
    *சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
    *தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.
    *நெருப்பை வாயால் ஊதக்கூடாது
    *பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,
    தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டால் எக்காரணம்கொண்டும் மற்றவரிடம் பகிராமல் பாவத்திற்கு பிராயசித்தமாக தெய்வ சன்னதியில் குளித்து தெய்வத்தை வணங்கவேண்டும்.

    *சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.
    - *சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.*கோவணமின்றி(உள்ளாடையின்றி) , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.
    *இருட்டில் சாப்பிடக்கூடாது.
    *சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
    சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .

    *குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.
    *ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது
    *தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.
    *மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
    உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

    *பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.
    *ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
    - வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது*.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.
    *ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது
    *சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது
    *பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,
    கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

    *பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்
    அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

    *அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.
    *ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
    மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை
    இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,
    அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

    - பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.
    *பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.
    *பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.
    *பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
    சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு
    புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

    *தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.
    *தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.
    *நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.
    *வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
    *கையால் மோரைக் குழப்பக்கூடாது.
    *நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.
    -

    இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம்


  • #2
    Re: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

    Some are known, some are unknown........Each saying is a pearl by itself.
    Viswanathan

    Comment


    • #3
      Re: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

      அருமையான அறிவுரைகள். நம் முன்னோர்கள் அன்றே அழாகாக பதிவு செய்துள்ளார்கள் எவற்றை செய்யக்கூடாது என்று. முடிந்தாவரை அனுசரிப்போம்.உதாரணம் -சேற்றில் அழுக்கான கால்களை ஒன்றன் மீது ஒன்றாக தேய்த்து அலம்புதல் தப்பு என்பது தவறு என்று தெரிந்தது. இனி செய்ய மாட்டோம்.
      நன்றி.பி.எஸ்என். அவர்களே.
      வரதராஜன்

      Comment


      • #4
        Re: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

        தங்களை போன்ற பெரியோர்கள் தனது தவறை திருத்திக்கொள்ளும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா.?

        Comment

        Working...
        X