Announcement

Collapse
No announcement yet.

Happiness

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Happiness

    Courtesy:Smt.Rajalakshmi
    சந்தோஷமாக இரு !
    *"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"
    ராதேக்ருஷ்ணா....
    தகப்பனே கொலை செய்ய
    முயற்சித்த போதும்
    ப்ரஹ்லாதன் சந்தோஷமாக இருந்தான் . . .
    சுடுகாட்டு வெட்டியானுக்கு
    அடிமையாக்கிய போதும்
    ராஜா அரிச்சந்திரன்
    சந்தோஷமாக இருந்தான் . . .
    பெற்ற பிள்ளையே
    கேவலப்படுத்திய போதிலும் கைகேயி
    சந்தோஷமாக இருந்தாள் . . .
    உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் சந்தோஷமாக இருந்தார் . . .
    அம்புப்படுக்கையில்
    வீழ்ந்த போதிலும்
    பீஷ்மர் சந்தோஷமாக இருந்தார் . . .
    இளம் விதவையான
    சமயத்திலும் குந்திதேவி
    சந்தோஷமாக இருந்தாள் . . .
    தரித்ரனாக வாழ்ந்த
    சமயத்திலும் குசேலர்
    சந்தோஷமாக இருந்தார் . . .
    ஊனமாகப் பிறந்து
    ஊர்ந்த போதிலும்
    கூர்மதாஸர்
    சந்தோஷமாக இருந்தார் . . .
    பிறவிக் குருடனாக
    இருந்தபோதிலும்
    சூர்தாஸர் சந்தோஷமாக இருந்தார் . . .
    மனைவி
    அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் சந்தோஷமாக இருந்தார் . . .
    கணவன்
    கஷ்டப்படுத்திய போதும்
    குணவதிபாய்
    சந்தோஷமாக இருந்தாள் . . .
    இருகைகளையும்
    வெட்டிய நிலையிலும்
    சாருகாதாஸர்
    சந்தோஷமாக இருந்தார் . . .
    கைகால்களை வெட்டிப்
    பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
    ஜயதேவர் சந்தோஷமாக இருந்தார் . . .
    மஹாபாபியினிடத்தில்
    வேலை செய்த போதும்
    சஞ்சயன் சந்தோஷமாக இருந்தார் . . .
    பெற்ற பிள்ளையை
    பறிகொடுத்த போதும்
    பூந்தானம் சந்தோஷமாக இருந்தார் . . .
    கூடப்பிறந்த சகோதரனே
    படாதபாடு படுத்தியபோதும்
    தியாகராஜர் சந்தோஷமாக இருந்தார் . . .
    நரசிம்மர் சன்னிதியில்
    விஷ தீர்த்தம் தந்த போதும்
    மஹாராஜா ஸ்வாதித் திருநாள் சந்தோஷமாக இருந்தார் . . .

    சோழ ராஜனின் சபையில்
    கண்ணை இழந்த பின்பும்
    கூரத்தாழ்வான் சந்தோஷமாக இருந்தார் . . .

    எப்படி முடிந்தது இவர்களால் ?
    ரகசியம்.....
    அவர்களோடு பகவான் எப்பொழுதும்
    இருக்கின்றான் என்று உணர்ந்ததால் ! ! !
    பகவான் எப்பொழுதும் கூட இருக்கிறான்
    என்று உணர வழி?
    விடாத நாம ஜபம்...
    அதனால் இனிமேல்
    அல்ப விஷயங்களுக்காக
    அழாதே ! ! !
    எது எப்படி இருந்தாலும்,
    யார் எப்படி நடத்தினாலும்,
    எவர் மாறினாலும்,
    எதை இழந்தாலும்,
    யாரை இழந்தாலும்,
    உன் க்ருஷ்ணன் உன்னுடன்
    இருக்கின்றான்....
    ஆதலால் ...
    விடாது நாம ஜபம் செய் . . .
    திடமாக பகவானை நம்பு . . .
    நீயும் சந்தோஷமாக இரு . . .
    இப்போதே சந்தோஷம் தெரிகிறதே...
Working...
X