Announcement

Collapse
No announcement yet.

Speech

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Speech

    Courtesy:Sri.Mayavaram Guru
    ✍🏼 ஆனந்தவேதம்
    வாய் ஓயாமல் பேச்சு . . .
    சம்மந்தமில்லாமல் பேச்சு . . .
    சம்மந்தமில்லாதவர்களைப் பற்றி பேச்சு . . .
    பைத்தியக்காரத்தனமான பேச்சு . . .
    எதைப்பற்றியாவது பேச்சு . . .
    ஆனால் என்ன ப்ரயோஜனம் ?
    யாரையாவது பற்றி உனக்கு
    என்ன பேச்சு ?
    உன் வாழ்க்கைக்கு வழி என்ன
    என்பதை இறைவனுனுடன் பேசாமல்
    மற்றவரைப் பற்றி என்ன பேச்சு ?
    நீ எதைப்பற்றியோ பேசி
    என்ன சாதித்தாய் ?
    இன்னும் நிறைய உன்
    குற்றங்களை களையவேண்டும் . . .
    மீண்டும் வருவேன் . . .
    பேசுவது குற்றமல்ல . . .
    அனாவசியமான பேச்சு குற்றமே . . .
    இதில் சந்தேகமில்லை . . .
    எவனோ,எவளோடு ஓடிப்போனால்,
    அதைப்பற்றி பேச
    உனக்கு என்ன அவசியம் ?
    நீ ஒழுங்காக வாழ வழி தேடு . . .
    ஒரு திரைப்படம் கேவலமாக
    இருந்தாலோ,அதை மற்றவர்
    ரசித்தாலோ, அதைப்பற்றி பேசி
    உனக்கு என்ன கிடைத்தது ?
    உன் வாழ்க்கை திரைப்படமல்ல . . .
    உருப்படாதவர்கள் என்று சிலர்
    சிலரைச் சொல்ல,அதை ஆமோதித்தோ,
    எதிராகவோ நீ பேச யார்
    உனக்கு அனுமதி தந்தது ?
    நீ உருப்படும் வழியைப்பார் . . .
    பேச்சை குறை . . .
    செயலில் இறங்கு . . .
    வாழ்க்கை கை நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது . . .
    ஜாக்கிரதை . . .
    இன்னும் சொல்லுவேன் . . .
    யாருடைய வீட்டில் எது
    நடந்தால் உனக்கென்ன ?
    முடிந்தால் உதவி செய் . . .
    இல்லையேல் உன் வாயை மூடிக்கொள் !
    சொந்தக்காரர்கள் யாரோடும்
    எப்படிப் பேசினால் என்ன ?
    நீ முடிந்தவரை யாரைப்பற்றியும் குறை கூறாதே !
    விளையாட்டில், யார் தோற்றாலென்ன?
    யார் ஜெயித்தாலென்ன?
    அதைப் பற்றிப் பேசி
    உனக்கு என்ன ப்ரயோஜனம் ?
    நீ வாழ்வில் தோற்றுவிடாதே . . .
    யாரோ ஒருவர் ஆடம்பர
    செலவு செய்ய,அதைப் பற்றி
    நீ பேசி என்னவாகப்போகிறது ?
    நீ ஆடம்பர செலவு செய்யாதே . . .
    நல்லதே பேசு . . .
    நல்லவரைப் பற்றியே பேசு . . .
    நன்மையே பேசு . . .
    நாகரீகமாகப் பேசு . . .
    நயமாகப் பேசு . . .
    நாணயத்தோடு பேசு . . .
    மரியாதையாகப் பேசு . . .
    புன்முறுவலோடு பேசு . . .
    அர்த்தத்தோடு பேசு . . .
    அமைதியாகப் பேசு . . .
    அன்போடு பேசு . . .
    அழகாகப் பேசு . . .
    சிரத்தையோடு பேசு . . .
    நம்பிக்கையோடு பேசு . . .
    நம்பிக்கை வரும்படி பேசு . . .
    நிதானமாகப் பேசு . . .
    புரியும்படியாகப் பேசு . . .
    புரிந்துகொண்டு பேசு . . .
    உள்ளதைப் பேசு . . .
    உண்மையைப் பேசு . . .
    உறுதியோடு பேசு . . .
    உயர்வானதைப் பேசு . . .
    உறுப்படியாய் பேசு . . .
    உணர்ந்து பேசு . . .
    ஒழுங்காகப் பேசு . . .
    சுருங்கப் பேசு . . .
    சுறுசுறுப்பாய் பேசு . . .
    சுயசிந்தனையோடு பேசு . . .
    மரியாதையாய் பேசு . . .
    மனதோடு பேசு . . .
    மகிழ்ச்சியாய் பேசு . . .
    பண்போடு பேசு . . .
    பார்த்துப் பேசு . . .
    பணிவோடு பேசு . . .
    பாங்காய் பேசு . . .
    பக்குவமாய் பேசு . . .
    வரம்போடு பேசு . . .
    அளந்து பேசு . . .
    தைரியமாகப் பேசு . . .
    தன்னம்பிக்கையோடு பேசு . . .
    பொறுமையோடு பேசு . . .
    பொறுப்போடு பேசு . . .
    தெளிவாகப் பேசு . . .
    தெரிந்ததைப் பேசு . . .
    தெரிந்தவரை பேசு . . .
    தன்மையோடு பேசு . . .
    அறிவோடு பேசு . . .
    ஆணித்தரமாய் பேசு . . .
    நயமாய் பேசு . . .
    வம்பு பேசாதே . . .
    வெட்டியாய் பேசாதே . . .
    வெறுப்பாய் பேசாதே . . .
    வெறுப்பேற பேசாதே . . .
    மட்டமாய் பேசாதே . . .
    தெரியாததைப் பேசாதே . . .
    ஆணவமாய் பேசாதே . . .
    கோபமாய் பேசாதே . . .
    கேவலமாய் பேசாதே . . .
    கெட்டதைப் பேசாதே . . .
    கெடுதலாய் பேசாதே . . .
    கேலியாய் பேசாதே . . .
    அவசரமாய் பேசாதே . . .
    சம்மந்தமில்லாமல் பேசாதே . . .
    புரியாமல் பேசாதே . . .
    முட்டாள்தனமாய் பேசாதே . . .
    முந்திரிகொட்டையாய் பேசாதே . . .
    முடியாததைப் பேசாதே . . .
    பைத்தியக்காரத்தனமாய் பேசாதே . . .
    பிடிவாதமாய் பேசாதே . . .
    பண்பில்லாமல் பேசாதே . . .
    அநாகரீகமாய் பேசாதே . . .
    அவசரப்பட்டு பேசாதே . . .
    அடாவடியாய் பேசாதே . . .
    நயவஞ்சகமாய் பேசாதே . . .
    அர்த்தமில்லாமல் பேசாதே . . .
    அசட்டுத்தனமாய் பேசாதே . . .
    ஆதாரமில்லாமல் பேசாதே . . .
    அதட்டிப் பேசாதே . . .
    ஆபாசமாய் பேசாதே . . .
    பொய்யாய் பேசாதே . . .
    பொய் பேசாதே . . .
    பொறுப்பில்லாமல் பேசாதே . . .
    பொறாமையில் பேசாதே . . .
    பொறாமையோடு பேசாதே . . .
    அறுவறுப்பாய் பேசாதே . . .
    உன் பேச்சு உன்னை ப்ரதிபலிக்கும் !
    சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமான் !
    சொன்ன வார்த்தை உனக்கு எஜமான் !
    உன் பேச்சு உன்னை மாட்டிவிடும் . . .
    உன் பேச்சு உன்னைக் காப்பாற்றும் . . .
    உன் பேச்சு உனக்கு பகையுண்டாக்கும் . . .
    உன் பேச்சு உனக்கு நண்பரைத் தரும் . . .
    உன் பேச்சு உனக்கு பொல்லாப்பைத் தரும் . . .
    உன் பேச்சு உனக்கு மரியாதையைத் தரும் . . .
    உன் பேச்சு உன் வாழ்வை நாசமாக்கும் . . .
    உன் பேச்சு உன் வாழ்வை வளமாக்கும் . . .
    உன் பேச்சு உன்னை அழிக்கும் . . .
    உன் பேச்சு உன்னை வாழவைக்கும் . . .
    உன் பேச்சு உனக்கு துக்கத்தைத் தரும் . . .
    உன் பேச்சு உனக்கு ஆனந்தத்தைத் தரும் . . .
    உன் பேச்சு உறவை அறுக்கும் . . .
    உன் பேச்சு உறவை பலப்படுத்தும் . . .
    உன் பேச்சு சண்டையை வரவழைக்கும் . . .
    உன் பேச்சு சமாதானம் செய்யும். . .
    புரிந்து கொள் . . .
    உன் வாயிலிருந்து வரும்
    ஒவ்வொரு வார்த்தையும் ஒரு அஸ்திரம் . . .
    உன் வாயிலிருந்து வரும்
    ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வையே மாற்றும் !
    உன் வார்த்தை,உன் பேச்சு
    உன் எண்ணங்களின் ப்ரதிபலிப்பு...
    வாயைத் திறக்குமுன் யோசி . . .
    வாழ்க்கை முடியும் முன்பு,
    வாழ்வை மாற்றிக்கொள் . . .
    இல்லையில்லை . . .
    வார்த்தையை மாற்றிக்கொள் . . .
    வார்த்தையே வாழ்க்கை . . .
    பேச்சே வாழ்விற்கு எமன் . . .
    பேச்சே வாழ்வின் பலம் . . .
    தவளை போல் தன் வாயால்
    கெடுவதும்,
    குயிலைப் போல் தன் வாயால்
    இனிமையாயிருப்பதும்,
    சிங்கம் போல் தன் வாயால்
    பயமுறுத்துவதும்,
    தெருநாய் போல் தன் வாயால்
    அடிபடுவதும்,
    இனி உன் பொறுப்பு . . .
    தூங்கும்போது பேசாதிருப்பதால்
    பலம் கூடுகிறது . . .
    விழித்திருக்கும்போதோ
    பேசிக்கொண்டேயிருப்பதால்
    பலம் குறைகிறது . . .
    இனி பேசுவதும்,
    ஒழுங்காய் பேசுவதும்,
    உளறிக்கொட்டுவதும்,
    உன் வாயைப் பொறுத்த விஷயம் .
    °===°=°===°=°===°=°
    குருஜீ கோபாலவல்லிதாசர்
    ஆனந்தவேதம் ✍🏼
Working...
X