Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீவைஷ்ணவன் .....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீவைஷ்ணவன் .....

    தற்பொழுது பேஷன் கருதி அல்லது நம்மை கவர அல்லது வியாபார தந்திரமாக வேஷ்டி தயாரிப்பாளர்கள் அகல கரையில் பெருமாளின் அபயங்களான சங்கு சக்கரத்துடன் திருமண் காப்புடன் கூடிய வஸ்திரங்களை சில ஆண்டுகளாக விற்கிறார்கள்.


    தயவு செய்து அதனை உங்களுக்காகவோ அல்லது 60-80 என அப்த பூர்த்தி கொண்டாடுபவர்களுக்கோ அல்லது வைதீக கர்மாக்களுக்கோ வாங்காதீர் !!!


    அப்படியே வாங்கினால் அதை பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள்...( இதை சில இடங்களில் அர்ச்சகரே உபயோகிப்பார் அல்லது ஏலம் விடுவர் அங்கும் மனிதர்கள் தான் உபயோகிப்பர் - எனவே வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது....


    ஏனெனில் பெருமாளின் அம்சங்களை நமது ஆசார்யன் பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது இரண்டு புஜங்களிலும் பதிப்பார்..இதன் பின் நமக்கு பன்னிரண்டு இடங்களில் ஊர்த்வபுண்டரம் என்னும் திருமண்காப்பை இடுவார்...


    மேலே சொன்ன அந்த சங்கு சக்ர அம்சம் இரண்டு புஜங்களில் மட்டுமே இருக்கவேண்டும்....


    பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் நமது நாபிகமலத்துக்கு (வயிற்றுக்கு) கீழே வரக்கூடாது....
    ஏனெனில் அதற்கு கீழ்தான் பகவான் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் பாதையை படைத்துள்ளான்...


    மறந்தும் அந்த இடங்களில் அவனது அங்கமான சங்கு சக்கரத்தையோ அல்லது ஊர்த்வ புண்டரங்களையோ, இட்டுகொள்வதோ அல்லது அதனை வேறுவிதமாக அணிந்து கொள்வது என்பது அந்த பகவானையும் அவனது பக்தனையும் அவமதிக்கும் ஒரு பகவத் பாகவத அபசாரமாகும்.


    அப்படிப்பட்ட அபசாரங்களை நமது ஶ்ரீவைஷ்ணவர்கள் செய்வது மன்னிக்கவே முடியாத ஒரு பாவச்செயல்....


    எனவே அவர்கள் விற்கிறார்கள் என்பதற்காக வாங்கி அபசாரபடாதீர்கள்-


    நீங்கள் அதனை வாங்காவிட்டால் தயாரிக்கமாட்டார்கள்....


    அதன் மூலம் துணிவியாபாரிகள், நெய்பவர்கள் ஆகியோர் நமது பகவத் அம்சத்தை அல்லது நமது ஊர்த்வ புண்டரத்தை அவமானப்படுத்த தூண்டுவது ஒழிந்து போகும் செய்வோமா..... ஶ்ரீவைஷ்ணவ அன்பர்களே....?


    ஜெய் ஶ்ரீராம்!![?][?] ஸ்ரீவைஷ்ணவன்

    Source Email Balaji Gopalan
    7 October at 09:58
    Last edited by soundararajan50; 08-10-16, 08:08.

  • #2
    Re: ஸ்ரீவைஷ்ணவன் .....

    அருமையான பதிப்பு. வாங்குவோர் இருந்தால் தானே விற்பனை. நமது பண்பாட்டை காப்போம். இது வைஷ்ணவர்களுக்கு மட்டுமல்ல. அனவரும் கடைபிடிக்க வேண்டிய அம்சம்

    Comment

    Working...
    X