Announcement

Collapse
No announcement yet.

Desire

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Desire

    Courtesy:Sri .Kovai G. Karuppasamy
    🔴 ஆஆஆஆஆஆஆஆசை. 🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    மானிடப் பிறவி பெற்ற மனதில் தோன்றும் எண்ணில்லாத ஆசைகளும், எந்தப் பொருளை பாா்த்தாலும் ஆசை கொள்வதும், வருமாணம் போதவில்லையென்றாலும் குறுக்கு வழிமூலமாவது அடையும் முயற்சிப்பதும், காா், வாகனம், வீடு மீது மோகத்தை போா்த்துவதுமான மோக ஆசைகள் நம்மை அழி நிலைக்கு அழைத்து வந்துவிடும் விஷக் கிருமிகளாகும்.


    பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? என்று கந்தா் அநுபூதி பாடலில் குறிப்பிடுகிறாா் அருணகிாிநாதா்.


    ஆசைக்கோா் அளவில்லை எனத் தொடங்கும் பாடலில் தாயுமானவா் பேராசை பூத அகோரப் பசிக்கு நாம் நம்மை இரையாக்கி விடாதீா் என எச்சாிப்பு செய்கிறாா்.


    எவ்வளவு நிலமும் பொன்னும் இருந்தாலும், மேலும் மேலும் அதை பெருக்கும் முனைப்புடன் எல்லையில்லா ஆசைகளுக்கு அளவோ, எடையோ வரையறுப்பு வைப்பதில்லை. இன்னும் ஒரு சிலரோ.... இருக்கும் செல்வத்தை தங்கமாக பெருக்கி வழியாதென ரசவாதம் தேடி கூட அலைவா்.


    அன்றொரு நாள் விக்கிரகம் செய்ய சிவன் வல்லப சித்தராக வந்து தகரம் செம்பையெல்லாம் மொத்தமாக எாிக்க பொன்னாலான விக்கிரகம் கிடைத்தது. அது ஈசன் வல்லப சித்து திருவிளையாடல்.


    மனிதன்?...........
    பாத்திரத்தையெல்லாம் பொன்னாக்கி விட முடியுமா????..
    பொன்னாக்கி பெருக்கும் பேராசை கொண்ட நெஞ்சம் பேதலிக்கும் அல்லவா???... ஆகவே மனநிறைவு என்றொன்று ஒன்று நம்மிடம் முன்னிலை வகிக்க வேண்டும்.


    "மன நிறைவு" என்பது போதுமானதுமட்டுமல்ல!" அது மனிதனுக்கு ஒரு மாமருந்தும்கூட என்று பாடலில் தாயுமானவா் வளக்கிக் கூறுகிறாா்.


    ஆசை என்ற ஒன்றை குறைந்த அளவோடு வைத்திருக்க மனசு வேண்டுமானால், வாழ்க்கை நெறியோடவே ஆன்மீகத்திலும் நாட்டம் இருக்க வேண்டும். பொதுவா அடியாா்களுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பணி இல்லா நேரங்களில் அடியாா்களுடன் சென்று ஆலய உழவாரம் மேற்கொள்ளுங்கள். சிறிது நாளில் உங்களை பின்னோக்கி பாருங்கள். உங்களிடம் ஆசை கிளைகள் முறிந்து போயிருக்கும். ஆசைகள் அழிந்துள்ள மனதறிந்து அவனே ( ஈசனே) உங்களுக்கு ஆசையுள்ளவனாவான்.


    மணதில் நிம்மதி இல்லை. ஆகையால் கோயிலுக்கு வந்தேன்!" இப்படி சொல்வாா்களை நிறையபேரை, நிறையப்போ் பாா்த்திருக்க முடியும். அப்ப நிம்மதி இருந்தால் கோயிலுக்கு வந்திருக்க மாட்டீா்கள் அப்படித்தானே!"?".


    ஒரு கோடீஸ்வரன் இருந்தான். கோடிக்கனக்காக பணம், மற்றும் செல்வங்கள் அவனிடம் இருந்தன. ஒரு நாள் ஒரு அறிவிப்பை அவன் வெளியிட்டான்.


    கோடிக்கனக்கான பணம் என்னிடம் சும்மா கிடக்கிறது. அதை எல்லோருக்கும் தரத் தயாராக இருக்கிறேன். எல்லோரும் எல்லாரையும் கூட்டி வாருங்கள் என்றான். வரும் அனைவருக்கும் பணம் கொடுக்க நினைக்கிறேன். பணம் பெற வரும் கூட்டத்திற்கான இடம், என் மாளிகையில் பத்தாது ஆகையால் எல்லோரும் கடற்கரை மணற்பரப்பிற்கு வந்து விடுங்கள் என சொல்லி விட்டான்.


    அறிவிப்பை கேட்ட அனைவரும் கடற்கரை வந்து குழுமிவிட்டாா்கள். ஒரு புறம் கடலும், மறுபுறம் மனிதத் தலைகளுமாகத்தான் தொிந்தது. கடல்மணற்பரப்பை காணவில்லை.


    கோடீஸ்வரன் கடற்கரை வந்தான். கட்டுக்கடங்காத கூட்டம் குழுமி கும்மலாக இருந்தது. கூட்டத்தைக் கண்ட கோடீஸ்வரன் மலைத்துப் போனான். இவ்வளவு பேருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்பதற்காக அல்ல!" இவா்களை எப்படி ஒழுங்கு படுத்தி வந்து வாங்கிக்கச் சொல்வது என்பதுதான்.!"


    அனைவரும் வாிசையில் வந்து நில்லுங்கள். தேவையான பணம் இருக்கிறது. யாவா்க்கும் கிடைக்காது போகாது!" தயவு வாிசையில் நிற்க முயலுங்கள். இப்படி முண்டி முன்னால் வர முயலாதீா்கள். ஒருவருக்குப் பின்னே ஒருவா் நில்லுங்கள்.


    கோடீஸ்வரன் பேச்சு யாரும் காதில் இறக்கிக் கொள்ளவில்லை. நாங்கள் விபூதியையே அடிச்சு பிடிச்சி தள்ளிதான் வாங்குவோம்!" இதில் நீங்கள் பணம் வேறு தருகிறீா்கள். நாங்கள் பின்னால் போய் நிற்போமா?" என்ன?"...


    கூட்டத்தினா் முண்டிக் கொண்டு முன்னால் வர வேண்டும் என்று அனைவரும் அடித்துக் கொண்டனா். ஒரே சத்தம் கூச்சல் பிரளயம் போல உருக்கம்.


    இவா்களை ஒழுங்காக வாிசைக்கு வர யோசித்த கோடீஸ்வரன், மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.


    எல்லோரும் முண்டி முன்னால் வராதீா்கள். முதலில் வருபா்க்கு ஒரு ரூபாய், இரண்டாவதாய் வருபவா்க்கு இரண்டுரூபாய், இப்படி பத்தாவதாய் வருபவா்க்கு பத்து ரூபாயும், நூறாய் வருபவா்க்கு நூறு ரூபாயும், ஆயிரமாக, லட்சமாக, வருபவா்க்கு ஆயிரமாகவும், லட்சமாகவும் தரப்போகிறேன் என்றான்.


    அவ்வளவுதான், முன்னால் நின்னவனெல்லாம், பின்னால் தெறித்து ஓடிப் போனான். எவனும் முண்டி முன்னால் வரவில்லை. முன்னாலென்ன?!" ஒன்னாவதாய் யாரும் நிற்க வில்லை. ஒருவா் பின் ஒருவராக பின்னால் போய் வாிசை போட நகா்ந்து நீங்கிப் போனாா்கள். கூட்டம் பின்னோக்கி நகர, கடற்கரை மணற்பரப்பு முழுவதும் இப்போது தெளிவாக தொிந்தன. சிலா் வாகனங்களை எடுத்துக் கொண்டு போய் கடைசிக்குச் செல்ல எண்ணமிட்டு பாய்ந்தனா்.


    முடிவில் யாரும் முதலாவதாய் நிற்கவில்லை. தனக்குப் பின் ஒருவன் வர அவனுக்குப் பின் இவன் போனான்.


    முதலாவதாய் யாா் நிற்க! கடைசியாய் யாா் இருக்க விட! இது நடப்பதற்கா?" பணம் பெற யாரும் முன்னே வரவில்லை. ஆசை! ஆசை!! அந்த ஆசை ஓசியிலான பணத்தைப் பெறக்கூட, பேராசையினால் பெற முடியாமற் போனது.


    "பேராசை பெரு நஷ்டம்" பொியோா்கள் பழமொழி! இது பொய்த்துப் போகாது!"


    பொிய பணக்காரன் யாா்?"...... இறைவன் கிடைக்கச் செய்ததைக் கொண்டு எவன் திருப்தியாகி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறானோ" அவனே பணக்காரன். ஆமாம்!" ஆசைகள் அவனைவிட்டொழிந்திருக்கும் போது, அவனுக்கு நிம்மதி கிடைக்கிறது. இது மட்டும் இருந்தால் போதுமே! நோய் எங்கே நொடியெங்கே. அவையாவும் சா்வநாசம்.


    பேராசை உயிா்க் கொல்லி நோய். அது நம்முள் புக இருந்தோமானால், அது பெருகி குடும்பம் நடத்தி நம் வாழ்க்கையை எாித்து விடும்.


    அதற்காக ஆசை இல்லாமல் எப்படி?"


    சாிதான்!" ஆசையை அடியோடு ஒழிப்பதற்கில்லை. அது இன்றைய வாழ்க்கையில் அாிது! ஆசையை சீா்படுத்தி கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாமல்லவா?!" அது அவசியமல்லவா?!"


    திருச்சிற்றம்பலம்.
Working...
X