Announcement

Collapse
No announcement yet.

Viradan Thuthi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Viradan Thuthi

    54. நீ1யாதி பரம்பரமு நின்னவே யுலகங்கள்
    ஆயாத சமயமுநின் 2னடியவே யயலில்லை
    தீயாரி னொளித்தியால் வெளிநின்றாற் றீங்குண்டோ
    வீயாத பெரு3மாயை விளையாட்டும் வேண்டுமோ.


    (இ-ள்) ஆதி பரம்பரம்உம் - முதன்மையாகிய மேலான கடவுளும், நீ - நீயேƒ உலகங்கள் - எல்லாவுலகங்களும், நின்ன ஏ - உனக்குக் கீழ்ப்பட்டவையேƒ ஆயாத சமயம்உம் - ஆராய்ந்தறிதற்கு அரிய எல்லாமதங்களும், நின் அடியஏ - உன்னைக் காரணமாய்ப்பற்றியவையேƒ அயல் இல்லை - வேறு இல்லைƒ (அங்ஙனமிருக்கவும்), தீயாரின் ஒளித்தி - வஞ்சகர்களைப்போல ஒளிக்கின்றாய்ƒ வெளி நின்றால் - (அங்ஙனம் ஒளியாது) வெளிப்பட்டு நின்றால், தீங்கு உண்டு ஓ - (உனக்குத்) தீமை உண்டோ?வீயாத - அழியாத, பெருமாயை விளையாட்டுஉம் - பெரிய மாயையாகிய விளையாட்டும், (உனக்கு), வேண்டுமோ? (எ-று)


    பராத்பரமென்றது, பரம்பரமென வந்ததுƒ சிறந்ததினுஞ்; சிறந்ததென்பது பொருள். நின்னஏ - உன் சுவரூபமானவையே யென்றுமாம். வானத்தினின்றும் பெய்கின்ற மழைநீ ரெல்லாம் கடலையே கலக்குமாறுபோல, எத் தேவர்களைக் குறித்துச் செய்கின்ற வந்தனை வழிபாடுகளும் சருவேசுவரனையே சேருமாதலால், „ஆயாதசமயமு நின்னடியவே… என்றான். ‘நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர்” என்றபடி „தீயோரே தம்மைக் கரக்க வேண்டியவர்: ஒளித்திருக்க வேணுமென்பதற்கு உனக்குயாதொரு காரணமும் இல்லை: அவ்வாறு இருந்தும் உன்னை வெளிக்காட்டாது ஒளித்திருக்கும் இந்த மாய விளையாட்டு ஏற்றுக்கு?… என்று வினாவும் முகத்தால் ஈசுவரனது மாயையின் மகிமை கூறப்பட்டது. „தீயாரின்… என்னும் உபமானத்தில் பழிப்பினால் புகழ்ச்சிதோன்றுமாறு காண்க. இனி, தீயவர்க்கு ஒளிக்கிறாயெனவுமாம். பி-ம்:- 1ஆதிப்பரப்பிரம்மம். 2அடியனவே. 3மாயவிளையாட்டும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X