Announcement

Collapse
No announcement yet.

Converting bane into boon

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Converting bane into boon

    Courtesy:Smt.Vaidehi
    _ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன._*
    *_அதில் கிடைக்கும் பாலில் தான் அவனது வருமானம்._* *_மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்._*
    *_ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்._*
    *_அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர்._*
    *_அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்._*
    *_அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும் " என்று ஆசி கூறினார்._*
    *_அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன._*
    *_எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது._*
    *_இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்._*
    *_சிறிய கூரை வீடு பெரிய காரை வீடானது._*
    *_திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை._*
    *_ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்._*
    *_தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்._*
    *_அவன் அவரைத் தேடி வருவானென்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை._*
    *_மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்._* *_இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்._*
    *_அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்._*
    *_அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்._*
    *_அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்._*
    *_ஞானிக்கு வந்தது கோபம் காசு பணம் வந்ததும் பழசையெல்லாம் மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே! இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது._* *_பழைய படி ரெண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!_* *_சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்._*
    *_அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ,_* *_பதறியடித்து ஓடிவந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்._* *_ஆனால் அவர் எங்கு தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்தபடியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான் ._*
    *_" என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழையபடி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்._*
    *_அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க. "_*
    *_அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய? இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே " என்றான்._*
    *_மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். "சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*
    *_நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது._*
    *_மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்._*
    *_குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவளாகவே சொன்னாள்._*
    *_"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க " பார்த்தான்._*
    *_அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்._* *_கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்._*
    *_மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?_*
    *_அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? "_*
    *_அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது._*
    *_அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப் பெரிய பணக்காரனானான்._*
    *_கொல்லப் பார்த்த தேவனுடைய கோபத்திலிருந்தே கணவனை_* *_புத்திசாலித்தனமாக காப்பாற்றிக் கொண்ட நம் பெண்களுக்கு இந்த சாதாரண சாபமெல்லாம் வெறும் வெத்து வேட்டுதானே?_*
    *_" குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது "_*
Working...
X