Announcement

Collapse
No announcement yet.

கனிமங்கள் -- 3.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனிமங்கள் -- 3.

    கனிமங்கள் -- 3.
    வேகமாய் சாகிறது பூமி !
    'தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலைவனமாகிவிடும். ஆனால், காவிடி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடி நீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊற்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப்பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.
    தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றூமதி ஆகின்றன. ஏண்/ அமெரிக்கா, ஐரோப்பாவில் கால்நடைகள் இல்லையா> அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்ட்ஸ்ட்டி' என்கிறார் கோபத்துடன் பேராசிரியர் ஜனகராஜன்.
    -- டி.எல். சஞ்சீவிகுமார்.
    -- ஆனந்த விகடன். 13-2-2013.
    Posted by க. சந்தானம்
Working...
X