Announcement

Collapse
No announcement yet.

தெரியுமா? - தெரியுமே!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரியுமா? - தெரியுமே!

    * ராமபிரானுக்கு உதவிய கழுகின் பெயர் ஜடாயு. இது இறந்தபின் ராமபிரான் அதை எரியூட்டிய இடம் ஜடாயு குண்டம். இது வைத்தீஸ்வரன்
    கோயில் வைத்தியநாதர் கோயிலின் உட்புறத்தில் உள்ளது. இந்த வரலாற்றைச் சொல்லும் சிற்பங்களும் அங்கு உண்டு.
    * சப்தரிஷிகள் : மரீசி, அத்திரி, ஆங்கிரஸ, பிருகு, கிருது, புவஸ்தியர், வசிட்டர் ( ஏழாவது தலைமுறை ), பரத்துவர்கள் என்பவர் ஆவர்.
    * கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது.
    * 'நவ' என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் பொருள் உண்டு. உத்தராயண காலத்தில் ( தை - ஆனி ) நடுவில் வருவது வசந்த ருது ( சித்திரை )
    தட்சிணாயண காலத்தில் ( ஆடி - மார்கழி ) நடுவில் வருவது சரத் ருது ( புரட்டாசி ). இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக்
    குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது.
    * பர்வத ராஜகுமாரியாக விளங்கும் பார்வதிக்கு 'உமா' என்று ஒரு பெயருண்டு.
    * 'உமா' என்பதை 'சக்தி பிரணவ மந்திரம்' என்று சாஸ்திரம் கூறுகிறது.
    * 'ஓம்' என்னும் பிரணவத்தில் இருப்பது போல, அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றும் 'உமா' என்ற மந்திரத்திலும் அடங்கியுள்ளது.
    * முள்ளம் பன்றியை நீரில் அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது. காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது. இவை பலூன்
    போல முள்ளம் பன்றியை மேலே மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது.
    Posted by க. சந்தானம்
Working...
X