Announcement

Collapse
No announcement yet.

புன்னகைப் பக்கம்! *

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புன்னகைப் பக்கம்! *

    புன்னகைப் பக்கம்!
    * "அந்தக்கால சாமியார்களுக்கும் இந்தக்கால சாமியார்களுக்கும் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்."
    "எப்படி?"
    "அந்தக்கால சாமியார்கள் பெண்களை தாயாகப் பார்த்தாங்க. இந்தக்கால சாமியார்கள் தாயாக்கப் பார்க்குறாங்க."
    * "இதைப் பார்த்தீங்களா? ரோட்டுல ஒரு நாய் செத்துக்கிடக்கு. சிங்கப்பூர்ல இது நடக்குமா?"
    "நாய் செத்துட்டா சிங்கப்பூர்லயும் நடக்காதுடி!"
    * "நோட்டாவுக்கு விழுந்திருக்கற வாக்குகளைப் பார்த்ததும் தலைவர் என்ன சொன்னார்?"
    "அடுத்த முறை தேர்தல்லே நிக்கும்போது அதையே நம்ம கட்சி சின்னமா வச்சுடலாம்னு சொன்னார்!"
    * "சார்! நம்ம ஆபீஸ் பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்."
    "தண்ணி அடிச்சுப் பார்த்தீங்களா?"
    "ஏற்கனவே தண்ணி ய்டிச்சுத்தான் விழுந்திருக்கான்!"
    * "ஹலோ இன்ஸ்பெக்டர்! சோமநகர் ஏழாவது தீருவுல விபசாரம் நடக்குது. உடனே வர்றீங்களா?"
    "சீச்சீ... வைய்யா போனை. நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது!"
    -- குமுதம். 4-6-2014.
    Posted by க. சந்தானம்
Working...
X