Announcement

Collapse
No announcement yet.

மாயாஜால சேலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாயாஜால சேலை

    மாயாஜால சேலை
    மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு நாள் காவிரிபுராணம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் சென்ற ஒரு துறவி, "அத்தினத்துக்கும் ஓட்டை கைக்கும் ஆயிரம் காதம். ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்று பாடிக் கொண்டே சென்றார். பண்டிதரான வித்வானுக்கு அந்த பாட்டின் பொருள் புரியவில்லை. துறவியை அழைத்து விளக்கம் கேட்டார். "அர்த்தம் சொல்லணுமா சாமி! அஸ்தினாபுரம் என்னும் சொல்லே 'அத்தினம்' என சுருங்கி விட்டது. 'ஓட்டை கை' என்பது துவாரகை. 'துவாரம்' என்பதற்கு 'ஓட்டை' என்றும் பொருளுண்டு. அஸ்தினாபுரம் அரண்மனியில் திரவுபதியின் துயிலை உரித்தபோது, நெடுந்தொலைவில் துவாரகையில் இருந்தாலும், கிருஷ்ணர் சேலையைக் கொடுத்து மானத்தைக் காத்தார். மாயாஜால கண்ணன் அவளுக்கு சேலை அளித்ததையே சேலை வியாபாரம்" என்று பாடியதாக தெரிவித்தார். விளகம் கேட்ட வித்வான் வியந்து போனார்.
    -- தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
    -- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: மாயாஜால சேலை

    Arumai arumai arumai !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X