Announcement

Collapse
No announcement yet.

ராமாயண கதை முழுதும் ''அ'' என்று ஆரம்பிக்கும

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமாயண கதை முழுதும் ''அ'' என்று ஆரம்பிக்கும

    ராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
    வடிவமைக்கப் பட்டுள்ளது.

    அனந்தனே அசுரர்களை அழித்து,
    அன்பர்களுக்கு அருள அயோத்தி
    அரசனாக அவதரித்தான்.

    அப்போது அரிக்கு அரணாக அரசனின்
    அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
    அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு
    அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?

    Click image for larger version

Name:	1.png
Views:	1
Size:	516.9 KB
ID:	34225

    அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
    அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!

    அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில்
    அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
    அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
    அடைந்தான் .

    Click image for larger version

Name:	2.png
Views:	1
Size:	410.4 KB
ID:	34226

    அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
    அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
    அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
    அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
    அனுப்பினாள்.

    Click image for larger version

Name:	3.png
Views:	1
Size:	634.7 KB
ID:	34227
    அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,
    அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
    அபகரித்தான்
    Click image for larger version

Name:	4.png
Views:	1
Size:	552.5 KB
ID:	34228
    அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
    அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை
    அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
    அளவில்லை.

    அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
    அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.

    Click image for larger version

Name:	5.png
Views:	1
Size:	420.1 KB
ID:	34229
    அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
    அரசனாக அரியணையில் அமர்த்தினர்.



    அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
    அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
    அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
    அளந்து அக்கரையைஅடைந்தான்.

    Click image for larger version

Name:	6.png
Views:	1
Size:	317.2 KB
ID:	34230
    அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க
    அன்னையை அடி பணிந்து அண்ணலின்
    அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
    அளித்தான்

    Click image for larger version

Name:	7.png
Views:	1
Size:	369.7 KB
ID:	34231

    அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
    அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும்
    அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

    அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்
    அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்
    அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான
    அதிசாகசம்.

    Click image for larger version

Name:	8.png
Views:	1
Size:	572.6 KB
ID:	34232
    அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
    அடக்கி ,அதிசயமான அணையை
    அமைத்து,அக்கரையை அடைந்தான்.

    Click image for larger version

Name:	9.jpg
Views:	1
Size:	56.8 KB
ID:	34233
    You will find this post very interesting ; PC RAMABADRAN

    அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
    அஸ்திரத்தால் அழித்தான்.

    Click image for larger version

Name:	10.png
Views:	1
Size:	228.8 KB
ID:	34234
    அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை
    அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

  • #2
    Re: ராமாயண கதை முழுதும் ''அ'' என்று ஆரம்பிக்கு&#2990

    Click image for larger version

Name:	11.png
Views:	1
Size:	504.4 KB
ID:	33927
    அன்னையுடன் அயோத்தியை அடைந்து
    அரியணையில் அமர்ந்து அருளினான்

    Click image for larger version

Name:	12.jpg
Views:	1
Size:	58.5 KB
ID:	33928
    அண்ணல் . அனந்த ராமனின் அவதார
    அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக
    அமைந்ததும் அனுமனின் அருளாலே.

    Click image for larger version

Name:	13.png
Views:	1
Size:	520.9 KB
ID:	33929

    Try not to become a man of success but rather try to become a man of value".

    Comment


    • #3
      Re: ராமாயண கதை முழுதும் ''அ'' என்று ஆரம்பிக்கு&#2990

      அற்புதம், அற்புதம், அற்புதம், வேறு என்ன சொல்ல
      அறியத்தந்தமைக்கு ரொம்ப நன்றி
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X