Announcement

Collapse
No announcement yet.

பூஜை முறை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பூஜை முறை !

    பூஜை முறை !
    சிவபெருமானை நாமெல்லாம் வில்வம் கொண்டுதான் பூஜிப்போம். ஆனால், கண்ணப்பர் -- மாமிசம், சாக்கிய நாயனார் -- கற்கள், பாணபத்திரர் -- இசை, நாவரசர் மற்றும் சம்பந்தர் -- கொஞ்சு தமிழ், சுந்தரர் -- மிஞ்சு தமிழ், மாணிக்கவாசகர் -- கண்ணீர் கொண்டு பூஜித்திருக்கிறார்கள்.
    -- ஆர். ஆர். பூபதி, கன்னிவாடி.
    பற்று, ஆசை, பேராசை !
    ஒரு துறவியிடம் இருந்த பல சீடர்களுள் ஒருவன், "குருவே! பற்று, ஆசை, பேராசை இவைகளின் பொருள் என்ன?" என்று கேட்டான்.
    "சீடனே! தன் பொருள் மேல் உண்டாகும் விருப்பத்திற்கு 'பற்று' என்றும்; பிறர் பொருள் மீது உண்டாகும் விருப்பத்திற்கு 'ஆசை' என்றும்; கிடைக்காத பொருள் மீது உண்டாகும் விருப்பத்திற்கு 'பேராசை' என்றும் பொருளாகும்' என்றார் துறவி.
    -- டி.பூபதிராவ், காஞ்சிபுரம்.
    -- குமுதம் பக்தி ஸ்பெஷல். டிசம்பர் 16-- 31, 2013.
Working...
X