Announcement

Collapse
No announcement yet.

Thamboolam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thamboolam

    அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம் :


    ( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )


    தாம்பூலம் என்பது வெற்றிலை பாக்கு இவற்றிற்கு வழங்கப்படும் பொதுப்பெயர் ஆகும்.


    அம்பாளின் லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
    தாம்பூல பூரித முகீ என்று வரும்.
    ( தாம்பூலம் தரித்த சிவந்த வாயை உடையவள் )


    மேலும் பகவானுக்கு செய்யும் பூஜையில் கூட
    கீழ்க்கண்ட மந்திரத்தில் நிவேதன மந்திரமாக தாம்பூலம் அங்கம் வகிக்கிறது.


    நிவேதன மந்திரம் :


    பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுக்தம்
    கற்பூர ஸூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம் கற்பூர தாம்பூலம் நிவேதயாமி


    என்று கூறி அந்த தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் தெளித்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வார்கள்.


    வெற்றிலையில் முப்பெரும் ( துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ) தேவியர்களும் வசிப்பதால் நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அவசியம் தாம்பூலம் தருதல் வேண்டும்.
    குறைந்த பட்சம் குங்குமமாவது தரவேண்டும்.


    வெற்றிலை சத்தியத்தின் சொருபமாக விளங்குவதால்தான் நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.
    அப்படி நிச்சயம் ( உறுதி ) செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது வாக்குத் தவறிய கொடும்பாவத்தை தேடித் தரும்.


    எல்லா தெய்வங்களின் பூஜையிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு.
    பகவானுக்கு நிவேதனம் செய்யும் போது தாம்பூலம் ( வெற்றிலை பாக்கு ) அவசியம்.
    மேலும் அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் ஆகும்.


    தாம்பூலம் ஆனது கீழ்க்கண்ட மங்களப் பொருள்களை உள்ளடக்கியது ஆகும். அவையாவன:


    வெற்றிலை ; பாக்கு ; மஞ்சள் ; குங்குமம் ; சீப்பு ; முகம் பார்க்கும் கண்ணாடி ; வளையல்கள் ; திருமாங்கல்ய சரடு ( மஞ்சள்கயிறு ) ; தேங்காய் ; பழம் : பூ ; மருதாணி ; கண் மை ; தக்ஷிணை ; புடவை ; ரவிக்கைத்துணி ; ஸ்லோக புஸ்தகம் ஆகியவை ஆகும்.


    இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை என்னவென்றால்


    1) வெற்றிலை பாக்கு - தாம்பூல மரியாதை


    2) மஞ்சள் குங்குமம் - சுமங்கலித் தன்மை


    3) திருமாங்கல்ய சரடு - தாலி பாக்கியம்
    ( மஞ்சள் கயிறு )


    4) சீப்பு - கணவனின் ஆயுள் விருத்தி


    5) வளையல்கள் - மன அமைதி


    6) கண்ணாடி - கணவனின் ஆரோக்யம்


    7) தேங்காய் - பாவங்கள் நீங்குதல்
    ( மட்டைத் தேங்காய் ( உரிக்காதது ) அளிப்பதே சிறந்தது )


    8) பழங்கள் - அன்னதான பலன்


    9) பூ - மகிழ்ச்சி பெருகுதல்


    10) மருதாணி - நோய்நொடி வராமல் இருக்க


    11) கண் மை - த்ருஷ்டி தோஷங்கள் விலக


    12) புடவை ; ரவிக்கைத் துணி - வஸ்திர தான பலன்


    13) ஸ்லோக புஸ்தகம் - வித்யா தான பலன்


    இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.


    ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !
Working...
X