Announcement

Collapse
No announcement yet.

Periyava’s Eye Operation

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Periyava’s Eye Operation

    அது 1974-ஆம் ஆண்டு..காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல் பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.இருந்தாலும், சில அன்பர்களது வற்புறத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகைச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
    ஆனால் அது போதிய பலன் தரவில்லை.
    அதோடு, பாதிக்கப்பட்ட அந்தக் கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது…அது பலன் தராது
    என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொருகண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மகா பெரியவா.
    நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட்..[புரை] ஏற்பட்டது.இதை அறிந்த
    பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி “கேட்ராக்ட்டுக்குப்
    பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்” என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.
    புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார். பெரியவா, “போதும்டா…இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே
    நான் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்” என்று அன்புடன்
    மறுத்து விட்டார்.
    ஆனால் மகா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை. கேட்ராக்ட்டுக்கு அவசியம்
    ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில்
    பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.
    அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத்
    மகா பெரியவாளுக்கு அறிமுகம் ஆனது.இந்த நேரத்தில்தான், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில்
    இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும் தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மகா பெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
    முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை
    விளக்கினார். ‘ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அதுபோல்
    நர்ஸ்,மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது” என்றெல்லாம் சில
    விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது.
    “நானும் மகா ஸ்வாமிகளின் பக்தன்தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப்
    பார்த்துக் கொள்கிறேன்” என்றார் மென்மையாக.
    ஆபரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை
    சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின்போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆபரேஷன்
    நேரத்தில் உதவியவர்கள் யார்?
    மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து,அவர்களைத்
    தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்,
    ஆபரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சென்னையில்
    இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மகா பெரியவாளுக்கு ஆபரேஷன் முடிந்தது.

    Source: Mahesh
Working...
X