Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 227 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 227 - பெரியாழ்

    பக்கங் கருஞ் சிறுப்பாறை மீதே
    அருவிகள் பகர்ந்து அனைய
    அக்கு வடம் இழிந்து ஏறித் தாழ
    அணி அல்குல் புடை பெயர
    மக்கள் உலகினில் பெய்து அறியாத
    மணிக் குழவி உருவின்
    தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
    தளர் நடை நடவானோ?
    பொருள்: கருமையான சிறிய மலைப்பாறைகளின் மீது அருவிநீர் பாய்ந்து அழகு செய்கின்றது. அதைப்போல, உயர்ந்த நீலமணி வண்ணனும், வாசுதேவனின் பிள்ளையுமான கண்ணன் இடையில் அணிந்திருக்கும் சங்குவடம் மேலும் கீழும் அசைந்தாடும்படியாக தளர்நடை இட்டு நடந்து வர மாட்டானோ?
Working...
X