Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 265 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 265 - பெரியாழ்&#

    மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
    தொடுப்பு உண்டாய் வெண்ணெயை என்று
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
    காணவே கட்டிற்று இலையே
    செய்தனச் சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
    சிரீதரா! உன் காது தூரும்
    கையில் திரியை இடுகிடாய் இந்நின்ற
    காரிகையார் சிரியாமே.
    பொருள்: ""அம்மா! பிறர் என்னை "வெண்ணெய் திருடன்' என்று சொன்னதை உண்மையென்று நம்பினாய். பலரும் பரிகாசம் செய்ய கையைப் பிணைத்து உரலோடு கட்டி வைத்தாய்,'' என்று யசோதையிடம், கண்ணன் கோபித்தான். அவனிடம், ""ஸ்ரீதரா! கள்ளச்சிரிப்புக்கு உரியவனே! நடந்ததையே பேசிக் கொண்டிராதே. சீக்கிரம் என் அருகில் வா! உன் காதில் உள்ள துளைகள் தூர்ந்து போகும் முன், திரியிட்டுக் (காதணி அணிந்து) கொள். இல்லாவிட்டால், கோகுலத்துப் பெண்கள் எல்லாம் உன்னைக் கண்டு சிரிப்பார்கள்,'' என்று அழைத்தாள் யசோதை.
Working...
X