Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை
    பற்றி எறிந்த பரமன் திருமுடி
    உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
    அற்றைக்கு வந்து குழல் வாராய் அக்காக்காய்!
    ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய்!
    பொருள்: காகமே! கன்று மேய்த்த கண்ணன், அதே போல் போலியாக கன்று வடிவில் வந்த அசுரனை வீசியெறிந்து கொன்றான். அத்தகு பெருமை மிக்கவனின் முடியை வார வருவாயாக. சக்கரம் ஏந்தி நிற்கும் அப்பெருமானின் கூந்தலை வார வருவாயாக. தேவையில்லாமல் கரைந்து கொண்டு அங்குமிங்கும் அலையாதே!
Working...
X