Announcement

Collapse
No announcement yet.

நல்ல நூல்களைப் படியுங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்ல நூல்களைப் படியுங்கள்

    * குடும்பத்தினர் ஒன்றுகூடி காலையிலும், மாலையிலும் கடவுளை வழிபட வேண்டியது அவசியம்.
    * பிழைகளில் எல்லாம் தலையாய பிழை, அறிவு தரும் நூல்களைப் படிக்காமல் காலத்தை வீணாக்குவதே.
    * ஒருவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், பக்தி இல்லாவிட்டால், விலங்கு நிலைக்கு தாழ்வான்.
    * கடவுளை எஜமானராகப் பாவித்து, முகம் சுளிக்காமல் சேவை செய்வதில் ராமபக்தனான அனுமனை, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    * உண்மையை யாரும் மறைப்பது கூடாது. உண்மை அளவில்லாத நன்மையைத் தரும்.
    * எந்த பாவத்தைச் செய்தாலும் மனிதனுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், நன்றி மறந்த பாவத்தை தெய்வம் கூட மன்னிப்பதில்லை.
    * வியாதி தீர மருந்து உண்ணும்போது பத்தியம் இருப்பர். அதுபோல, தெய்வீக வாழ்விற்கு ஒழுக்கம் என்னும் பத்தியம் அவசியம்.
    * வயலில் இட்டவிதை பலமடங்கு பெருகுவது போல, மனிதன் செய்த நல்வினை, தீவினையின் பயன்கள் ஆயிரம் ஆயிரமாகப் பெருகிவரும்.
Working...
X