Announcement

Collapse
No announcement yet.

செலவே இல்லாமல் எல்லா யாகமும் செய்யலாம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • செலவே இல்லாமல் எல்லா யாகமும் செய்யலாம்

    ஒரு காசு கூட வேண்டாம்....எல்லா யாகங்களையும் நடத்திய பலனை அடைந்து விடலாம்...எப்படி? திருப்பாவை என்பதே ஒரு யாகம். வேதத்தின் சாரத்தையே திருப்பாவையாக்கித் தந்திருக்கிறாள் ஆண்டாள். அஸ்வமேத யாகம் செய்தால் அதற்குரிய பலன் மட்டுமே கிடைக்கும். மழைக்குரிய யாகம் செய்தால் மழை மட்டுமே பெய்யும். புத்திரகாமேஷ்டி நடத்தினால் புத்திர பாக்கியம் மட்டுமே கிடைக்கும். திருப்பாவையின் முப்பது பாடல்களையும் பாடினால், எல்லா யாகமும் செய்த பலனை அடைந்து விடலாம். ஏனெனில், இந்தப் பாடல்களுக்குள் எல்லா யாகங்களுக்குரிய மந்திரத்தின் உட்பொருளும் அடங்கியிருக்கிறது. திருப்பாவை என்ற பெயரில் பல வேள்விகளை நடத்தியிருக்கிறாள் ஆண்டாள்.
Working...
X