Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 9 அரங்கனே ! அடியேனை அடĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 9 அரங்கனே ! அடியேனை அடĬ

    திருவரங்கத்தந்தாதி 9 அரங்கனே ! அடியேனை அடிமையாக ஏற்று அருள் !



    கைக்குஞ்சரமன்றளித்தாய் அரங்கமண் காக்கைக்கும் மாயக்
    கைக்குஞ்சரமசரம் படைத்தாய் கடல்நீறெ
    த்து
    கைக்குஞ்சரமகரக்குழையா
    யெனைக்கைக்கொளுடல்
    கைக்குஞ்சரம
    சையிலஞ்சேலென்றென் கண்முன்வந்தே

    பதவுரை : அரங்கனே ! அடிமையாக ஏற்று அருள் !

    கைக்குஞ்சரம் கஜேந்திரனை
    அன்று முன்பு
    காத்தாய் காத்து அருளியவனே !
    அரங்க ரங்கநாதனே !
    காக்கைக்கும் காப்பதற்கும்
    மாய்க்கைக்கும் அழிப்பதற்கும்
    மண் உலகத்தில்
    சரம் அசரம் இயங்குவதையும் இயங்காததையும்
    படைத்தாய் உண்டாக்கினாய் !
    கடல் நீறு எ
    கடல் வறண்டு புழுதி படும் படி
    துகைக்கும் அதனை வருத்தத்தொடங்கிய
    சர ஆக்னெயாஸ்திரம் உடையவனே !
    மகரக்குழையாய் மகர குண்டலங்கள் அணிபவனே !
    உடல் எனது சரீரத்தை
    கைக்கும் ஒழிக்கும்படியான
    சரம தசையில் கடைசி காலத்தில்
    என்கண்முன் வந்தே எனது கண்ணெதிரில் தோன்றி
    அஞ்சேலென்று அஞ்சாதே என்று அபயம் அளித்து
    எனைக்கைக்கொள் என்னை அடிமையாக ஏற்று அருள் !

    Last edited by sridharv1946; 31-05-13, 15:27.
Working...
X