Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 19 அரங்கனுக்கு அன்பரா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 19 அரங்கனுக்கு அன்பரா

    திருவரங்கத்தந்தாதி 19 அரங்கனுக்கு அன்பராகி அடைவீர் ஆனந்தமே !

    ஐயமருந்திவையுண்ணென்றுமாதரட்டூட்டுஞ்செல்வம்
    ஐயமருந்தினைப்போதேயவரின்பமாதலின்
    ஐயமருந்தியக்கங்குருகாமுன்னரங்கற்கன்பாய்
    ஐயமருந்தியும்வாழ்மின்கண்மேலுமக்கானந்தமே

    பதவுரை :

    ஐய ஐயனே !
    இவைஇவ்வுணவுகள்
    மருந்து அமிர்தம் போன்றவை

    உண் சாப்பிடுங்கள்
    என்று எனச் சொல்லி
    மாதர் காதல் பெண்கள்
    அட்டு ஊட்டும் சமைத்து உண்பிக்கும்
    செல்வம் ஐஸ்வர்யம்
    ஐயம் நிலையற்றது !
    அவர் இன்பம்அவர்கள் கொடுக்கும் இன்பமும்
    அருந் தினைப்போதே சிறிது காலத்ததே !
    ஆதலினால் ஆதலால்
    ஐ அமரும் தியக்கம் கோழையால் வரும் துன்பம்
    குருகாமுன் ஏற்படுவதற்கு முன்னேயே
    ஐயம் அருந்தியும் பிச்சை எடுத்து உண்டாலும்
    அரங்கற்கு ரங்கநாதனுக்கு
    அன்பு ஆய பக்தி கொண்டு
    வாழ்மின்கள் வாழுங்கள் !
    மேல் இனிமேல்
    உமக்குஆனந்தமே உங்களுக்கு பரமானந்தமே !


Working...
X