Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 20 நம் அரங்கனைப் பற்றி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 20 நம் அரங்கனைப் பற்றி

    திருவரங்கத்தந்தாதி 20 நம் அரங்கனைப் பற்றினால் நரகம் இல்லை !

    நந்தமரங்கனைமாகடலேழுநடுங்கவெய்த
    நந்தமரங்கனைப்பற்றுநெஞ்சேவினைநையு முன்கை
    நந்தமரங்கனையார்மயல்போம்வருநற்கதிவா
    நந்தமரங்கனைவர்க்குமெஞ்ஞான்றுநரகில்லையே

    பதவுரை :

    நெஞ்சே என் மனமே !
    மரம் ஏழு நந்த ஏழு மராமரங்கள் அழியவும்
    கனை மா கடல் ஒலிக்கின்ற பெரிய கடல்
    ஏழு நடுங்க ஏழு அஞ்சி நடுங்கவும்
    எய்த அம்பு தொடுத்த
    நம் தம் அரங்கனை நம் ரங்கநாதனை
    பற்று சரண் அடைவாய் !
    வினை நையும் கருமங்கள் அழியும் !
    முன் கை முன்னங்கைகளில்
    நந்து அமர் சங்கு வளையல் அணிந்த
    அங்கனையார் பெண்களிடம்
    மயல் போம் மயக்கம் அழியும் !
    நல் கதி சிறந்த பதவியான
    வானம் வரும் வைகுண்டம் கிடைக்கும் !
    தமர் அனைவர்க்கும் நம்மை சேர்ந்தவர்க்கும்
    எஞ்ஞான்றும் எப்பொழுதும்
    நரகு இல்லை நரகம் கிடையாது !

Working...
X