Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 24 வேதனை அளித்த நாதனை &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 24 வேதனை அளித்த நாதனை &

    திருவரங்கத்தந்தாதி 24 வேதனை அளித்த நாதனைவேதனை ஊதும் பூதனை
    அத்தன் வேதனை தீர்த்தானை
    ஏத்தினால் தீருமே வேதனை!


    அத்தனைவேதனையீன்றவரங்கனையைம்படைசேர்
    அத்தனைவேதனைவாய்வைத்தமாயனையாரணங்கோர்
    அத்தனைவேதனைதீர்த்தானைச்சேர்க்கிலளாயிரஞ்சால்
    அத்தனைவேதனையப்புவள்சாந்தென்றனலரைத்தே

    அத்தனை எல்லார்க்கும் இறைவனும் ,
    வேதனை ஈன்ற அரங்கனை பிரமனைப்பெற்ற திருவரங்கனும் ,
    ஐம்படை சேர் அத்தனை ஐந்து ஆயுதங்கள் சேர்ந்த கைகள் உடையவனும் ,
    வே(ய்) தனை வாய் வைத்த மாயனை குழலை வாயில் வைத்துள்ள மாயனும்,
    ஆர் அணங்கு ஓர் அத்தனை அருமையான பார்வதியுடன் கூடிய சிவனுடைய
    வேதனை தீர்த்தானை துயரம் தீர்த்தவனுமான திருமாலை
    அனை என்னுடைய தாய்
    சேர்க்கிலள் என்னோடு சேர்த்து வைக்கவில்லை.
    சாந்து என்று சந்தனக் குழம்பு என்று
    அனல் அரைத்து நெருப்பை அரைத்து
    ஆயிரம் சால் ஆயிரம் சால் அளவு
    வேது அப்புவள் வெப்பத்தை என் உடம்பில் அப்புவாள் .



Working...
X