Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 30 ஆராத நஞ்சு உள்ள கண்ĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 30 ஆராத நஞ்சு உள்ள கண்ĩ

    திருவரங்கத்தந்தாதி 30 ஆராத நஞ்சு உள்ள கண்டனே ஆராதநம் செய்யும்போது நான் யார் ?

    ஆராதனஞ்செய்துகண்டனின்கீர்த்தியறைவன்றிரு
    ஆராதனஞ்செய்வன்வேதாவென்றாலடியேன்புகழ்கைக்கு
    ஆராதனஞ்செய்யபோதாந்திருமகளாகபல்பூண்
    ஆராதனஞ்செயன்பாகாவரங்கத்தமர்ந்தவனே

    பதவுரை :

    செய்ய போது செந்தாமரை மலரை
    ஆதனம் ஆம் இருப்பிடமாகக் கொண்ட
    திருமகள் மஹாலக்ஷ்மியை
    ஆக மார்பில் உடையவனே !
    பல் பூண் ஆரா பல ஆபரணங்களையும், மாலையும் தரிப்பவனே !
    தனஞ்செயன் பாகா அர்ஜுனனின் சாரதியே !
    அரங்கத்து அமர்ந்தவனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ளவனே !
    ஆராத நஞ்சு கொடிய விஷத்தை
    எய்து கண்டன் கழுத்தில் உடைய சிவனும்
    நின் கீர்த்தி அறைவன் உன் புகழைப் பாடுவான் !
    வேதா பிரமனும்
    திரு ஆராதனம் செய்வன் உன்னை பூஜை செய்வான் !
    என்றால் அப்படியானால்
    அடியேன் புகழ்கைக்கு ஆர் உன்னைத் துதிப்பதற்கு எனக்கு என்ன தகுதி ?




    Last edited by sridharv1946; 21-06-13, 12:36.
Working...
X