Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 32 வல் வில்லாளா ! முளரி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 32 வல் வில்லாளா ! முளரி

    திருவரங்கத்தந்தாதி 32 வல் வில்லாளா ! முளரியாள் மணாளா ! ஆள் ஆக வந்த அடியேனுக்கு அருள் !
    ஆளாகவந்தவடியேற்கருள்பரியானைதிண்டேர்
    ஆளாகவந்த
    னிற்செற்றிலங்கேசனையட்டவல்வில்
    ஆளாகவந்தன்புயந்துணித்தாயரங்காமுளரி-
    ஆளாகவந்தமில்லுன்னடியார்க்கன்பனாவதற்கே


    பதவுரை :

    ஆகவந்தனில் போரில்
    பரி குதிரைகளையும்
    யானை யானைகளையும்
    திண் தேர் பலமுள்ள தேர்களையும்
    ஆள் காலாள்களையும்
    செற்று அழித்து
    இலங்கேசனை அட்ட ராவணனைக் கொன்ற
    வல் வில் ஆளா வலிய வில்லை ஆள்கின்ற வீரனே !
    கவந்தன் புயம் துணித்தாய் கபந்தனின் தோள்களை வெட்டியவனே !
    அரங்கா ரங்க நாதனே !
    முளரியாள் தாமரை மலரில் இருக்கும் மஹா லக்ஷ்மியை
    ஆக மார்பில் உடையவனே !
    ஆள் ஆக வந்த அடிமையாக வந்த
    அடியேற்கு அடியேனுக்கு
    அந்தம் இல் எல்லை இல்லாத
    உன் அடியார்க்கு உன் பக்தர்களுக்கு
    அன்பன் ஆவதற்கு அடியவன் ஆவதற்கு
    அருள் கருணை செய் !

    Last edited by sridharv1946; 22-06-13, 12:58.
Working...
X