Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 34 அரங்கா ! என்னை ஏசும் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 34 அரங்கா ! என்னை ஏசும் 

    திருவரங்கத்தந்தாதி 34 அரங்கா ! என்னை ஏசும் சிறையில் அடைத்திடேல் !

    அம்புவிலங்கைநகர்பாழ்படச்சங்குமாழியும்விட்டு
    அம்புவிலங்கைகொண்டாயரங்காவன்றிடங்கர்பற்றும்
    அம்புவிலங்கையளித்தாயினியென்னையாசையென்றிய்-
    அம்புவிலங்கையிட்டேசுஞ்சிறையிலடைத்திடலே

    பதவுரை : அம் + புவி + லங்கை
    = அம்பு + வில் + அம் + கை
    = அம்பு + விலங்கை

    அம் புவி அழகிய பூமியில்
    லங்கை நகர் பாழ் பட இலங்கை அரக்கர்கள் அழியும்படி
    சங்கும் ஆழியும் விட்டு சங்கு சக்கரங்கள் இல்லாமல்

    அம்பு வில் அம்பையும் வில்லையும்
    அம் கை கொண்டாய் அழகிய கைகளில் கொண்டவனே !
    அரங்கா ரங்க நாதனே !
    அன்று முன்பு
    அம்பு தண்ணீரில்
    இடங்கர் பற்றும் முதலை பிடித்துக்கொண்ட
    விலங்கை யானையை
    அளித்தாய் பாதுகாத்தவனே !
    இனி இனி மேல்
    என்னை அடியேனை
    ஆசை என்று இயம்பு ஆசை என்று சொல்லப்படும்
    விலங்கை இட்டு விலங்கை பூட்டி
    ஏசும் சிறையில் பிறர் இகழும் சிறையில்
    அடைத்திடேல் அடைக்க வேண்டாம் !
Working...
X