Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 36 அற்பர் அரங்கற்கு அன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 36 அற்பர் அரங்கற்கு அன

    திருவரங்கத்தந்தாதி 36 அற்பர் அரங்கற்கு அன்பாய் இருக்கிலரே !

    இருந்தையிலங்கவெளிறுபடாதென்செய்தாலுநிம்பத்து
    இருந்தையிலந்தித்திதயாதவைபோற்புல்லர்யாவுங்கற்றாய்ந்து
    இருந்தையிலம்பன்னகண்ணார்க்கல்லால்வெண்ணெயில்லில்லொளித்து
    இருந்தையிலங்கையரங்கற்கன்பாகியிருக்கிலரே

    பதவுரை :


    என்செய்தாலும் என்ன தான் செய்தாலும்
    இருந்தை கரியானது
    இலங்க விளங்கும்படி
    வெளிறு படாது வெண்மை ஆகாது ;
    நிம்பத்து இரும் தையிலம் கசப்பான வேப்பெண்ணெய்
    தித்தியாது இனிமை பெறாது ;
    அவை போல் அதே போல
    புல்லர் அற்பர்கள்
    யாவும் கற்று எல்லாவற்றையும் படித்து
    ஆய்ந்து இருந்து ஆராய்ந்திருந்தாலும்
    ஐயில் அம்பு அன்ன கூரிய அம்பு போன்ற
    கண்ணார்க்கு அல்லால் கண்களை உடைய பெண்களை விட்டு விட்டு ,
    இல்லில் ஒளித்து இருந்து வீட்டில் மறைந்து உட்கார்ந்து
    வெண்ணெய் வெண்ணெயை
    ஐயில் அம் கை எடுத்து உண்ட அழகிய கைகளை உடைய
    அரங்கர்க்கு ங்கநாதரிடம்
    அன்பாகி இருக்கிலரே அன்பாக இருக்க மாட்டர்கள் !


Working...
X