Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 54 அரங்கனை அன்றி ஆரையĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 54 அரங்கனை அன்றி ஆரையĬ

    திருவரங்கத்தந்தாதி 54 அரங்கனை அன்றி ஆரையும் அடி பணிய மாட்டேன் !
    ஆகமதிக்குமுகமேன்முகமுடையானயன்வாழ்
    ஆகமதிக்குநவநீதக்கள்வவவனிகொள்வார்
    ஆகமதிக்குளஞ்சேரரங்காவுன்னையன்றித்தெய்வம்
    ஆகமதிக்குளெண்ணேனடியேன்பிறராரையுமே




    பதவுரை : ஆகம +திக்கு
    ஆக + மதிக்கு
    ஆகா + மதிக்குள்

    ஆகம திக்கு முக ஆகமங்கள் உரைக்கும் நான்கு முகங்களுக்கு
    மேன்முகமுடையான் மேலும் ஒரு முகத்தை (5) உடைய சிவனும்
    அயன் பிரமனும்
    வாழ் ஆக இனிது வசிக்கும் திருமேனி உடையவனே !
    மதிக்கு நவநீத கள்வ கடைந்த வெண்ணெயைத் திருடியவனே !
    அவனி கொள் வாராக பூமியை கொண்டு வந்த வராஹனே !
    மதி குளம் சேர் அரங்கா சந்திர புஷ்கரிணியை உடைய ரங்கநாதா !
    உன்னை அன்றி உன்னை அல்லாமல்
    பிறர் ஆரையும் வேறு யாரையும்
    தெய்வம் ஆக கடவுளாக
    மத்கிக்குள் எண்ணேன் மனதாலும் நினைக்க மாட்டேன் !



    Last edited by sridharv1946; 05-07-13, 11:22.
Working...
X