Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 57 அகமே ! அரங்கருக்கு ஆ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 57 அகமே ! அரங்கருக்கு ஆ

    திருவரங்கத்தந்தாதி 57 அகமே ! அரங்கருக்கு ஆட்செய் ! ஐவரை அடி !

    அடியவராகவுமாட்கொள்ளவுமெண்ணியாருயிர்கட்கு
    அடியவராகம்படைத்தமையாலகமேபெரிய
    அடியவராகவரங்கருக்காட்செயருட்கதையால்
    அடியவராகஞ்செய்மாரனுக்காட்செயுமைவரையே

    பதவுரை : அடியவர் + ஆகவும்
    அடி +அவர் + ஆகம்
    அடிய + வராக
    அடி +அவ + ராகம்

    அடியவர் ஆகவும் தொண்டர்கள் ஆகுமாறும்
    ஆட்கொள்ளவும் அடிமை கொள்ளுமாறும்
    எண்ணி திருவுளம் கொண்டு
    அவர் அப்பெருமான்
    அடி ஆதி காலத்தில்
    ஆருயிர்கட்கு நிறைந்த உயிர்கட்கு
    ஆகம் படைத்தமையால் சரீரத்தைக் கொடுத்ததால்
    அகமே மனமே !
    பெரிய அடிய பெரிய கால்களுடைய
    வராக வராஹனாக அவதரித்த
    அரங்கர்க்கு ஆள் செய் ரங்கநாதர்க்கு அடிமை ஆகு !
    அருள் கதையால் அவருடைய கருணையால்
    அவ ராகம் கெட்ட ஆசையை
    செய் மாரனுக்கு விளைக்கும் மன்மதனுக்கு
    ஆள் செயும் ஐவரை அடிமை செய்யும் பஞ்ச இந்திரியங்களை
    அடி அடக்கு !


Working...
X