Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 62 வைகுந்தர் வடிவு ஐந்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 62 வைகுந்தர் வடிவு ஐந்

    திருவரங்கத்தந்தாதி 62 வைகுந்தர் வடிவு ஐந்திலும் வாழ்கிறார் !

    வைகுந்தர்தாமரைபோற்பாதர்நாகத்துமாதர்புடை
    வைகுந்தமேற்கொண்டிருந்தோர்வடிவைந்தின்வாழுமிடம்
    வைகுந்தம்பாற்கடன்மாநீரயோத்திவண்பூந்துரை
    வைகுந்தமன்பர்மனன்சீரரங்கம்வடமலையே

    பதவுரை : வை +குந்தர்
    வைகுந்தம்
    வைகும் +தம்

    வை குந்தர் கூர்மையான குந்தம் என்னும் ஆயுதத்தை உடையவரும் ,
    தாமரை போல் பாதர் தாமரை போன்ற திருவடிகள் உடையவரும் ,
    நாகத்து புன்னை மரத்தின் மேலும்

    குந்தம் மேல் குந்த மரத்தின் மேலும்
    மாதர் புடைவை கோபியர்களுடைய சேலைகளை
    கொண்டு இருந்தோர் கவர்ந்து கொண்டு ஏறி இருந்த திருமால்
    வடிவு ஐந்தின் ஐந்து உருவங்களோடு
    வாழுமிடம் இருக்கும் இடங்களாவன :
    வைகுந்தம் பரமபதம் (பரம்) ,
    பாற்கடல் பாற்கடல் (வ்யூஹம் ) ,
    மா நீர் அயோத்தி நீர் வளமுள்ள அயோத்யா (விபவம்) ,
    வள் பூ துவரை வளமை கொண்ட துவாரகை (விபவம்) ,
    வைகும் தம் அன்பர் மனம் நிலையான பக்தர்களது மனம் (அந்தர்யாமி) ,
    சீர் அரங்கம் ஸ்ரீரங்கம் (அர்ச்சை) ,
    வடமலை திரு வேங்கட மலை (அர்ச்சை).
Working...
X