Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 69 ஆசை அற்று அரங்கன் அĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 69 ஆசை அற்று அரங்கன் அĩ

    திருவரங்கத்தந்தாதி 69 அண்டம் உண்ட அரங்கனுக்கு தொண்டர் ஆகி உய்ம்மின் !

    கமலங்குவளைமடவார்தனங்கண்களென்றுரைத்த
    கமலங்குவளைமுதுகாகியுங்கரைவீர்புனற்கா-
    கமலங்குவளைவிளையாடரங்கன்விண்காற்றுகனல்
    கமலங்குவளையுண்டான்றொண்டராயுய்ம்மின்காமமற்றே

    பதவுரை : கமலம் + குவளை
    அகம் + மலங்கு + வளை
    காகம் +மலங்கு + வளை
    கமலம் + கு + வளை

    மடவார் பெண்களுடைய
    தனம் கமலம் கொங்கைகளை தாமரை மொட்டு என்றும்
    கண்கள் குவளை கண்களை குவளை மலர் என்றும்
    என்று உரைத்த என்று புனைந்து சொல்லி
    மலங்கு வளை முதுகு வருந்துகின்ற கூன் முதுகு ஆன பின்னும்
    அகம் கரைவீர் மனம் உருகுபவர்களே !
    காமம் அற்று அந்த ஆசையை ஒழித்து
    விண் காற்று கனல் ஆகாயம் , வாயு , அக்னி ,
    கமலம் , கு , அளை ஜலம் , பூமி , வெண்ணெய் ஆகிய எல்லாவற்றையும்
    உண்டான் விழுங்கியவனும்
    புனல் காக்கை நீர்க் காக்கைகளும்
    மலங்கு மலங்கு மீன்களும்
    வளை சங்குகளும்

    விளையாடு விளையாடும்
    அரங்கன் ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவனுமான ரங்கநாதனுக்கு
    தொண்டர் ஆய் பக்தர்களாகி
    உய்ம்மின் வாழுங்கள் !




    Last edited by sridharv1946; 10-07-13, 21:34.
Working...
X