Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை , குறியானை , க&#

    திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை ,குறியானை , குறி யானை காத்தானைப் பாடினேன் !

    குறியானைச்செங்கணெடியானைவானவர்கோவைச்சங்கக்-
    குறியானைவித்ததிருவரங்கேசனைக்கூவிநின்று
    குறியானைக்காத்தவனைப்பாடினேன்கொடிகூப்பிடினுங்-
    குறியானையப்பவர்போற்கொடியேன்சொலுங்கொள்வனேன்றே



    பதவுரை : குறியானை


    குறியால் + நைவித்த
    குறி + யானை
    குறியா +நயப்பவர்


    கொடி கூப்பிடினும் காக்கை இயல்பாய் கத்தினாலும்
    குறியா நயப்பவர் போல் நல்ல சகுனமாய் கொள்பவர் போல்
    கொடியேன் சொலும் கொடியவனான என் சொல்லையும்
    கொள்வன் என்று நன்மையாக ஏற்றுக் கொள்வன் என்று நினைத்து

    குறியானை குறள் வடிவம் கொண்ட வாமனனை ,
    செம் கண் நெடியானை சிவந்த கண்கள் உடைய வளர்ந்த த்ரிவிக்ரமனை ,
    வானவர் கோவை தேவர்கள் தலைவனான இந்திரனை
    சங்கக் குறியால் சங்க முழக்கத்தினால்
    நைவித்த திருவரங்கேசனை மயங்கி விழச் செய்த ரங்கநாதனை ,
    கூவி நின்று குறி கூவி அழித்து தியானித்த
    யானை காத்தவனை கஜேந்திரனை காப்பற்றியவனை .
    பாடினேன் கவி பாடினேன்

Working...
X