Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 99/100 சிந்து சூழ் உலகம் ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 99/100 சிந்து சூழ் உலகம் ப&

    திருவரங்கத்தந்தாதி 99/100 சிந்து சூழ் உலகம் படைத்தவனே ! சிந்தா ! என் சிந்தாகுலம் தீர் !

    சிந்தாகுலமுய்யக்குன்றெடுத்தாய்தென்னரங்கசுற்றுஞ்-
    சிந்தாகுலகுலகம்படைத்தளித்தாய்னிலஞ்சென்றிரந்த
    சிந்தாகுலவுசெல்வந்தந்தைதாய்குருதெய்வமுநீ
    சிந்தாகுலமடைந்தேனடியேன்சென்மந்தீர்த்தருளே

    பதவுரை : சிந்து + ஆ + குலம்
    சிந்து + ஆகு + உலகம்
    சிந்தா + குலவு
    சிந்தா + ஆகுலம்

    சிந்து இந்திரன் பொழிந்த மழையால் வருந்திய
    ஆ குலம் பசுக் கூட்டம்
    உய்ய வாழ்வதற்கு
    குன்று எடுத்தாய் கோவர்த்தன மலையை குடையாய் எடுத்தவனே !
    தென் அரங்க ஸ்ரீ ரங்கத்தில் இருப்பவனே !
    சுற்றும் சிந்து ஆகு சுற்றிலும் கடல் சூழ்ந்த
    உலகம் படைத்து அளித்தாய் உலகத்தை உண்டாக்கி கொடுத்தவனே !
    சென்று நிலம் இரந்த மகாபலியிடம் சென்று நிலத்தை யாசித்த
    சிந்தா வாமனனே !
    குலவு செல்வம் சிறப்பான செல்வமும்
    தந்தை தாய் தந்தையும் தாயும்
    குரு தெய்வம் ஆசிரியனும் கடவுளும் எல்லாம் நீயே !
    சிந்தா ஆகுலம் அடைந்தேன் மனக் கலக்கம் அடைந்துள்ள
    அடியேன் சென்மம் அடியேனுடைய பிறப்புகளை
    தீர்த்து அருள் ஒழித்துக் கருணை செய்.
    Last edited by sridharv1946; 20-07-13, 14:29.
Working...
X