Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 3/100 தீங்கு அடத் திர&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 3/100 தீங்கு அடத் திர&

    திரு வேங்கடத்து அந்தாதி 3/100 தீங்கு அடத் திருமாலைக் கவி புனைந்தோம்.இதின் சீரியது ஏது ?




    வேங்கடமாலையவியாமதிவிளக்கேற்றியங்கம்
    ஆங்கடமாலயமாக்கிவைத்தோமவன்சேவடிக்கே
    தீங்கடமாலைக்கவிபுனைந்தோமிதின்சீரியதே
    யாங்கடமாலையிராவதமேறியிருக்குமதே

    பதவுரை : வேங்கட + மாலை (திருமால்)
    ஆம் + கடம் + ஆலயம்
    தீங்கு + அட + மாலை (பூமாலை)
    யாம் + கட + மால்

    அங்கம் ஆம் கடம் உறுப்புகள் உடைய உடலை
    ஆலயம் ஆக்கி திருக் கோவிலாக அமைத்து
    அவியா மதி விளக்கு ஏற்றி கெடாத அறிவாகிய திரு விளக்கை ஏற்றி
    வேங்கட மாலை திருவேங்கடமலையில் இருக்கும் திருமாலை
    வைத்தோம் மனத்தில் வைத்தோம்
    தீங்கு அட எமது துன்பங்களை அழிப்பதற்கு
    அவன் சேவடிக்கே அப்பெருமானுடைய திரு அடிகளுக்கே
    மாலைக் கவி புனைந்தோம் பாமாலை ஆகிய பூமாலைத தொடுத்தோம்
    யாம் கட மால் இயிராவதம் ஏறி யாம் மயக்கமுடைய ஐராவதத்தின் மீது ஏறி
    இருக்கும் அது வீற்றிருப்பது
    இதின் சீரியதே இதை விட சிறந்ததா ?
Working...
X