Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 20/100 வேங்கடவன் கழலி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 20/100 வேங்கடவன் கழலி&

    திரு வேங்கடத்து அந்தாதி 20/100 வேங்கடவன் கழலில் சென்னி வைத்து வைகுண்டம் வெல்வீ ர்

    மதியாதவன்கதிர்மின்மினிபோலொளிர்வைகுந்தந்தா-
    மதியாதவன்றரவாழ்ந்திருப்பீர்வடவேங்கடவன்
    மதியாதவன்கடத்துட்டயிர்வாய்வைத்தமாயப்பிரான்
    மதியாதவனுரங்கீண்டான்கழல்சென்னிவைத்திருமே


    பதவுரை : மதி + ஆதவன்
    தாமதியாது + அவன்
    மதியாத + வன்
    மதியாதவன்


    கடத்துள் மதியாத வல் தயிர் குடத்தில் வைத்திருந்த கடையாத கட்டித் தயிரை
    வாய் வைத்த சாப்பிட்ட
    மாயப்பிரான் மாயை உடைய பெருமானும்
    மதியாதவன் உரம் கீண்டான்தன்னை மதிக்காத ஹிரண்யனுடைய மார்பைப பிளந்தவனுமான
    வட வேங்கடவன் கழல் திரு வேங்கடமுடையவனுடைய திருவடிகளில்
    சென்னி வைத்து இரும் தலையை வைத்து வணங்குங்கள்
    மதி ஆதவன் கதிர் சந்திரன் சூரியன் இருவர்களுடைய ஒளி கூட
    மின்மினி போலஒளிர் மின்மினி பூச்சி போல மங்குகின்ற
    வைகுந்தம் ஸ்ரீ வைகுண்டத்தை
    தாமதியாது அவன் தர உடனே திருமால் உங்களுக்கு கொடுத்து அருள
    வாழ்ந்து இருப்பீர் அங்கு நிலையாக வாழ்வீர்கள் !

    Last edited by sridharv1946; 29-07-13, 12:08.
Working...
X