Announcement

Collapse
No announcement yet.

விஜய பாரதம் http://cowprotectionforce.blogspot.in/2013/08/blog-post_16.html contn..2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விஜய பாரதம் http://cowprotectionforce.blogspot.in/2013/08/blog-post_16.html contn..2


    இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு

    யஜுர் வேதம் – 13.48
    “மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”
    ——————————————————–
    அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல! யஜுர் வேதம் மிகத் தெளிவாகக் குதிரையைப் பலி கொடுக்காதீர் (ம) என்று சொல்லி விட்டது.
    ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம் அல்லது சாம்ராஜ்யம் என்று பொருள்படும்.
    மேத என்றால் வதை அல்ல. அது புத்திக்கு ஏற்றாற்ப்போல செய்யப்படும் ஒரு காரியம் என்றும் ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம் என்றும் பொருள் பட ஏதுவாகிறது. இதன் மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-மே
    ராஷ்டிரம் வா அஷ்வமேதா:
    அன்னம் ஹி கெள
    அக்னிர்வா அஷ்வா:
    ஆஜ்யம் மேதா:
    (ஷத்பதம் 13.1.6.3)
    ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உண்மையின் ஒளியில் (Light of Truth) கூறுகிறார்:
    “ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின் பெருமை, நலன் மற்றும் வளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம் எனப்படும்.”
    “உணவைப் புனிதமாக வைக்கவும் அல்லது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது உணவைப் புனிதமாக ஆக்கவும் அல்லது சூரியனின் கதிர்களை நற்பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும், பூமியை அசுத்தத்திலிருந்து காக்கவும் செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம் எனப்படும்”
    ஞானபூமி — இதில் நம் தமிழ் மொழியில் கோமகன் என்றால் கொற்றவன் / மன்னவன் என்றும் கண்டிருக்கிறோம், கோமகன் என்றால் பசுவின் மகன் என்றா பொருள்படும்? ஒரு வேளை மேதாவிலாசம், மேதை என்ற சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும் ஒன்றையொன்று வார்த்தைப் பிரயோகங்களை கொடுத்து வாங்கியது என்பது மொழியாய்வாளர்களின் கருத்தே –
    “கெள என்றால் பூமி, பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் காக்கவென்று செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்”
    “வேதங்களின் அடிப்படையில் உருவான வழிமுறைகளின் படி இறந்தவரின் உடலை எரியூட்டுவதன் பெயர் நரமேத யக்ஞம்”
    [பாகம் 3] – வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை

    குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.
    வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.

    க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:
    யஜுர் வேதம் – 13.49
    “பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
    ——————————————————–
    ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து
    ரிக் வேதம் – 7.56.17
    “ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
    ——————————————————–
    சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
    அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
    ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
    அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
    ——————————————————–
    கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே -
    அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
    அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
    அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று
    பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.

    அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய
    ரிக் வேதம் – 1.164.27
    “பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”
    சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:
    ரிக்வேதம் – 5.83.8
    “அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”
    யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
    யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
    ரிக் வேதம் – 10.87.16
    “மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
    விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா
    யஜுர் வேதம் 12.73
    “அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”
    மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
    ரிக் வேதம் 8.101.15
    “பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
    அந்தகாய கோஹாதம்
    யஜுர் வேதம் – 30.18
    “பசுவதை செய்பவர்களை அழி!”
    யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
    தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ
    அதர்வ வேதம் – 1.16.4
    “யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
    வத்ஸம் ஜாதமிவாக்ன்யா
    அதர்வ வேதம் – 3.30.1
    பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
    தேனு சதனம் ரயீநாம்
    அதர்வ வேதம் – 11.1.34
    பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்
    ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.
    ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
    ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
    ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
    காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
    யூயம் காவோ மேதயதா
    மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:

    அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

    பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
    பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
    பசு வதை யாரும் செய்யக் கூடாது.
    பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
    பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
    பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.

    இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறது வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது. படித்தவர்கள் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். வேதங்கள் உயிர்வதையை, மேலாக பசுவதையையும் மாட்டிறைச்சியையும் எதிர்க்கிறதென்பதை.

    ஆதார நூல்கள்:
    1. Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati
    2. Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati
    3. No Beef in Vedas by BD Ukhul
    4. Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati
    5. All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar
    6. Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur
    7. The Myth of Holy Cow – by DN Jha
    8. Hymns of Atharvaveda – Griffith
    9. Scared Books of the east – Max Muller
    10. Rigveda translations by Williams/Jones
    11. Sanskrit English Dictionary – Monier Williams
    12. Commentary on Vedas by Dayanand Sansthan
    13. Western Indologists – a study of motives by Pt Bhagvadutt
    14. Satyarth Prakash by Swami Dayanand Saraswati
    15. Introduction to Vedas by Swami Dayanand Saraswati
    16. Cloud over understanding of Vedas by BD Ukhul
    17. Shathpath Brahman
    18. Nirukta – Yaska Acharya
    19. Dhatupath – Panini

    contd..3..
Working...
X