Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 77/100 வேங்கடவன் கதை அ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 77/100 வேங்கடவன் கதை அ

    திரு வேங்கடத்து அந்தாதி 77/100 வேங்கடவன் கதை அன்றி வேறு ஏறாது என் செவியில் !

    என்னப்பனாகத்துப்பொன்னூலன் வேங்கடத்தெந்தை துயின்-
    மன்னப்பனாகத்துக்கஞ்சலென்றான் பன்மணிசிதறி
    மின்னப்பனாகத்துப்பாய்ந்தான் கதையன்றிவெவ்வினைக-
    டுன்னப்பனாகத்துபொய்ந்நூல் புகாவென்றுளைச்செவிக்கே




    பதவுரை : என் + அப்பன் + ஆகத்து
    மன் + அப்பன் + நாகத்துக்கு
    (யானை)
    மின்ன + பல் + நாகத்து
    (பாம்பு)
    துன்ன + பல் ​+ நா + கத்து

    என் அப்பன் எனது சுவாமியும்
    ஆகத்துப் பொன் நூலன் மார்பில் பொன்னால் ஆன பூணூலை அணிந்தவனும்
    துயில் மன் அப்பன் கடலில் சயனம் செய்பவனும்
    நாகத்துக்கு அஞ்சல் என்றான் யானைக்கு அபயம் அளித்தவனும்
    பல் மணி சிதறி மின்ன பல் மாணிக்கங்கள் தெறித்து பிரகாசிக்கும்படி
    பல் நாகத்துப் பாய்ந்தான் பற்களை உடைய காளிங்கன் மீது பாய்ந்தவனுமான
    வேங்கடத்து எந்தை திரு வேங்கடவனுடைய
    கதை அன்றி சரித்திரங்கள் அல்லாமல்
    வெவ்வினைகள் துன்ன கொடிய தீ வினைகள் நெருங்க
    பல் நா கத்து பர சமயத்தாரது நாக்குகள் கத்தும்
    பொய் நூல் பொய்யான சமய நூல்களின் பொருட்கள்
    என் துளை செவிக்கு புகா எனது காதுகளில் நுழையாது
    Last edited by sridharv1946; 21-08-13, 14:18.
Working...
X