Announcement

Collapse
No announcement yet.

குபேரன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குபேரன்

    குபேரன்

    குபேரன் இந்து சமயத்தில் செல்வத்தின் கடவுள் என்றும் செல்வத்தின் அதிபதி என்றும் இந்துக்கள் நம்புகின்றார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு.



    Click image for larger version

Name:	Kuberan.jpg
Views:	1
Size:	44.5 KB
ID:	35126
    குபேரனின் மனைவியாக சித்திரலேகா என்ற பெண்ணை இந்துக்கதைகள் கூறுகின்றன. நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்கள் குபேரனுக்கு இருப்பதாக மகாபாரதக் கதை கூறுகிறது. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

    இராமாயணக் காவியத்தில் இடம்பெற்ற இராவண்ணன், கும்பகர்ணன் இருவரும் இவருடைய மாற்றாந்தாய் பிள்ளையாவார்கள். சூர்ப்பனகை இவருடைய தங்கையாக குறிப்பிடப்படுகிறார். இலங்கையை குபேரன் ஆண்டு கொண்டிருந்ததாகவும், அதை இராவணன் தட்டிப் பரித்ததாகவும் நம்புகிறார்கள்.

    புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.




    Source:Nagarathar
Working...
X