Announcement

Collapse
No announcement yet.

பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&

    Part 1 of 4

    தியானத்தில் ஒரு முகப்படுத்துவதற்கு பெரிய இடைஞ்சல் என்ன?இந்த மனசு ஒயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ஆசைப்படாதே என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.

    நாம் ஒரு வஸ்துவை நினை என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்லுகிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஒடி, சாந்தி குலைந்து போகிறது.

    பேசாமல் இரு என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஒரளவுக்காவது பேசாதிருக்கிறது. பார்க்காதே என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஒரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் நினைக்காமல் இரு என்று எவ்வளவுதான் மூடிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம் நினை என்றால் மனம் நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ய்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.


    (to be continued...)


Working...
X