Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 091/100 அழகா ! உயிர் விடும் காலம் &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 091/100 அழகா ! உயிர் விடும் காலம் &

    3. அழகர் அந்தாதி - 091/100 அழகா ! உயிர் விடும் காலம் என்னைக் காத்து அருளே !

    காலமலைக்கும் புவனங்களைக் கரந்தாய் ! உதிரம்
    காலமலைக்குமைத்தாய் ! அழகா ! கமலத்துப் பஞ்சார்
    காலமலைக்கும் புவிக்கும் அன்பா ! உயிர் காயம் விடும்
    காலமலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்து அருளே !

    பதவுரை : கால் + அம் + அலைக்கும்
    கால + மலை + குமைத்தாய்
    கால் + அமலைக்கும்
    காலம் + மலைக்கும்

    கால் அம் அலைக்கும் ஊழிக் காற்றால் அலை கொந்தளிக்கும்
    புவனங்களை கரந்தாய் உலகங்களை உன் வயிற்றில் ஒளித்து வைத்தவனே !உதிரம் கால மலைக் குமைத்தாய் இரத்தம் சிந்த , மல்லர்களை அழித்தவனே !
    கமலத்து தாமரையில் இருக்கும்
    பஞ்சு ஆர் கால் செம்பஞ்சு குழம்பு தடவிய திருவடிகளை உடைய
    அமலைக்கும் புவிக்கும் அன்பா ! ஸ்ரீதேவிக்கும் பூமி தேவிக்கும் அன்புள்ள கணவனே !
    உயிர் காயம் விடும் காலம் என் உயிர் இந்த உடலை விட்டு நீங்கும் காலத்தில்
    மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து போரிட வரும் யமனைச் சினந்து
    என்னைக் காத்து அருளே ! என் உயிரை நற்கதியில் சேர்த்துப் பாதுகாப்பாய் !


    --

    V.Sridhar


Working...
X