Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 புல்லாண&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 புல்லாண&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 புல்லாணி மாலே ! உன் கதையால் இதயம் கரையும் !

    திருப்பதி - 44/108. பாண்டிய நாடு - 04/18 : திருப் புல்லாணி

    மத யானைக் கோள் விடுத்து , மா முதலை கொன்ற
    கதையால் இதயம் கரையும் - முதல் ஆய
    புல்லாணி மாலே ! புறத்தோர் புகழ் இருப்பு
    வல் ஆணி ; என் செவிக்கு மாறு

    பதவுரை :

    முதல் ஆய புல்லாணி மாலே முழு முதல் கடவுள் ஆன திருப் புல்லாணி எம்பெருமானே !
    மத யானைக் கோள் விடுத்து மதம் கொண்ட கஜேந்திரனின் துன்பம் போக்கி ,
    மா முதலை கொன்ற துன்பம் கொடுத்த முதலையையும் கொன்ற
    கதையால் இதயம் கரையும் வரலாற்றால் என் மனம் உருகும்
    புறத்தோர் புகழ் பிற தெய்வங்களுடைய புகழ்
    என் செவிக்கு எனது காதுகளுக்கு
    மாறு வல் இருப்பு ஆணி விரோதமான வலிய இரும்பு ஆணி போன்றதாம்







    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 07-11-13, 20:41.
Working...
X