Announcement

Collapse
No announcement yet.

யார் எண்னம் சிறந்தது

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யார் எண்னம் சிறந்தது

    இரண்டு துறவிகள் ஒன்றாக பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிள் ஒருவர் துறவியாக இருந்தாலும் அவசரதேவைகளுக்கு கொஞ்சம் பணம் வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்.

    மற்றொருவரோ'முற்றும் துரந்தவர்களுக்கு எதுவுமே தேவையில்லை,அவர்கள் தேவை அறிந்து இறைவன் உதவுவார் என்ற எண்ணம் கொண்டவர்.

    வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது . அதை கடந்தால்தான் அவர்கள்மேலும்பயணம் செய்யமுடியும். ஆற்றங்கரையில் பட்கோட்டி படகுடன் நின்றிருந்தான். பணமில்லாத துறவி'படகுக்காரனுக்கு தர நம்மிடம் பணம் இல்லை.இரவை இங்கேயே கழிப்போம்.பொழுது விடிந்ததும் யாராவது இங்கு வந்தால் நமக்கு உதவி கிடைக்கும்,நாம் அக்கரை போவோம் என்றார்.

    அதற்கு மற்றொருவர் 'இங்கு இரவில் தங்குவது ஆபத்து,என்னிடம் பணம் உள்ளது வாருங்கள் போவோம்'என கூட்டிசென்றார்.

    மறு கரையை அடைந்ததும் பணம் வைத்திருந்ததுறவி' துறவியாக இருந்தாலும் நாம் சிரிதளவு பணம் வைத்திருக்கவேண்டும்.என்னிடம் பணம் இருந்ததால்தானே இங்கு வரமுடிந்தது.உங்களைபோன்று நானும் இருந்திருந்தால் நம் நிலமை என்ன? சிந்தித்துபாருங்கள்.என்வழிதான் சிறந்த வழி என்றார்.

    அதற்கு பணம் இல்லாதவர் 'நீங்கள் சொன்னது உண்மைதான், என் நிலைமையை நினைத்துபாருங்கள்,பணம் இல்லாமலேயே நான் இங்கு வந்துவிட்டேன்.இறைவன் உங்கள் வழியாக எனக்கு உதவி செய்துள்ளார். என் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை இல்லை! என உறுதியுடன் சொன்னார்.

    குமுதம் பக்தி.
Working...
X