Announcement

Collapse
No announcement yet.

பயன் அறிந்து செயல்படு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பயன் அறிந்து செயல்படு

    * இளமூங்கிலை சுலபமாக வளைத்து விடலாம். முற்றி விட்டால் வளைவதற்கு பதிலாக முறிந்து விடும். மனிதனும் இளமையில் தன்னை சீர்திருத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும்.
    * சுயநலத்திற்காக மனிதன் தனக்கு சாதகமானதை மட்டும் பேசுகிறான். ஆனால், நியாயத்தைப் பின்பற்றி வாழ்வதே சரியானது.
    * நல்ல விளக்கு இருந்தாலும் பார்ப்பதற்கு கண்வேண்டும். அதுபோல, நாலு துணையிருந்தாலும் வாழ்வதற்கு சுயபுத்தி வேண்டும்.
    * தெய்வத்தை சரணடைந்தவர்கள் தாமதம் இல்லாமல் கடமையைச் செவ்வனே செய்வார்கள். அவர்களுடைய செயலுக்கேற்ப பயனும் அதிகமாக கிடைக்கும்.
    * செயலைத் தொடங்கும்போது அதன் பயனை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். அற்ப செயலுக்காக உழைப்பது, சங்கீதம் படிக்கப் போன கழுதை போலாகி விடும்.
    - பாரதியார்
Working...
X